உயரம் குறைந்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் உத்தரகாண்ட் அரசு
நைனிடால்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உயரம் குறைவாக உள்ளவர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் 4 அடி உயரத்துக்கும் குறைவான குள்ள மனிதர்கள் பரவலாக வசிக்கிறார்கள். உயரம் குறைவாக இருப்பதாக அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

சரிவர வேலை செய்ய முடியாததால், வருமானத்திற்கு வழியின்றி இவர்களது குடும்பங்கள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்டவர்களுக்கு உதவ உத்தரகாண்ட் அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, 4 அடி உயரத்திற்கு குறைவாக உள்ள 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 800 நிதியுதவி வழங்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் 4 அடி உயர குள்ள மனிதர்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. சம்பாவத் மாவட்டத்தில் 4 பேர் இந்த நிதி உதவிபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications