உயரம் குறைந்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் உத்தரகாண்ட் அரசு

Subscribe to Oneindia Tamil

நைனிடால்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உயரம் குறைவாக உள்ளவர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் 4 அடி உயரத்துக்கும் குறைவான குள்ள மனிதர்கள் பரவலாக வசிக்கிறார்கள். உயரம் குறைவாக இருப்பதாக அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

Adults less than 4 feet tall in Uttarakhand to get Rs 800/month

சரிவர வேலை செய்ய முடியாததால், வருமானத்திற்கு வழியின்றி இவர்களது குடும்பங்கள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்டவர்களுக்கு உதவ உத்தரகாண்ட் அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, 4 அடி உயரத்திற்கு குறைவாக உள்ள 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 800 நிதியுதவி வழங்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் 4 அடி உயர குள்ள மனிதர்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. சம்பாவத் மாவட்டத்தில் 4 பேர் இந்த நிதி உதவிபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+