இந்தியாவில் கிளை துவங்கும் அல் கொய்தா: உளவுத் துறையிடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு
டெல்லி: அல் கொய்தாவின் புதிய கிளை இந்திய துணை கண்டத்தில் துவங்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி சுமார் ஒரு மணிநேரம் பேசும் வீடியோ போராளிகள் அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜவாஹிரி கூறியிருப்பதாவது,
நாங்கள் இஸ்லாம் இந்தியாவுக்குள் திரும்பி வர விரும்புகிறோம். படையெடுக்கப்படும் முன்பு இந்தியா முஸ்லீம் உலகத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இந்திய துணை கண்டத்தில் அல் கொய்தா அமைப்பின் புதிய கிளை துவங்கப்படுகிறது. இந்த கிளை காஷ்மீர், குஜராத், அகமதாபாத், அஸ்ஸாம், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் உள்ள முஸ்லீம்களுக்காக அமைக்கப்படுகிறது.

இந்த புதிய கிளைக்கு அல் கொய்தா அமைப்பின் பாகிஸ்தானுக்கான ஷரியா குழு தலைவர் அசிம் உமர் தலைவராக இருப்பார். உஸ்தாத் உசாமா மஹ்மூத் செய்தித் தொடர்பாளராக இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமாவை அமெரிக்கா சுட்டுக் கொன்ற பிறகு ஜவாஹிரி அந்த அமைப்பின் தலைவராக ஆனார். அவர் தற்போது அல் கொய்தா அமைப்புக்கு புத்துயிர் அளித்து விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.
ராஜ்நாத் சிங்
ஜவாஹிரியின் அறிவிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உளவுத் துறை அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அந்த வீடியோ உண்மையானதா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்பிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அல் கொய்தாவின் அறிவிப்பு குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா தலைவர் ஆலோக் ஜோஷி ஆகியோரும் ராஜ்நாத் சிங்குடன் அவசர ஆலோசனை நடத்தினர்.
மேலும் அனைத்து காவல் நிலையங்களையும் உஷார் நிலையில் இருக்குமாறு உளவுத் துறை தெரிவித்துள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications