பெங்களூரில் கலவர மேடையான பாஜக, காங். வேட்பாளர்கள் பங்கேற்ற விவாத மேடை
பெங்களூர்: தெற்கு பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனந்த் குமார் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகேனி ஆகியோருக்கு இடையே நடந்த விவாதம் வில்லங்கத்தில் முடிந்தது.
தெற்கு பெங்களூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அனந்த் குமார் மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நந்தன் நிலகேனி ஆகியோருக்கு இடையே பெங்களூரில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாத நிகழ்ச்சிக்கு பயோகான் தலைவர் கிரண் மஜும்தார் ஷா தலைமையிலான பெங்களூர் அரசியல் நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் முதலாவதாக பேசிய அனந்த் குமார் கன்னடத்தில் பேசினார். அவரை அடுத்து பேச வந்த நிலகேனி ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கட்டாயப்படுத்தி கன்னடத்தில் பேச வைத்தனர். இதையடுத்து பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதமும், கிட்டத்தட்ட கைகலப்பும் நடந்தது. அனந்த் குமார் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பற்றி பேசியபோது காங்கிரஸார் மேடையில் ஏறி அவரை பேசவிடாமல் கூச்சலிட்டனர். இதையடுத்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
உங்கள் தொகுதிக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டால் அதை கூறாமல் அனந்த் குமார் மத்திய அரசை தாக்கிப் பேசுகிறார் என்று நிலகேனி பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அனந்த் குமார் கூறுகையில், நான் நாடு சந்திக்கும் முக்கிய பிரச்சனையை எழுப்பினேன். அப்போது காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்கள் வந்து இடையூறு செய்தனர். இது ஜனநாயக முறைப்படி நடந்த விவாதம். அவர்கள் கூறியதை நாங்கள் பொறுமையுடன் கேட்டோம் என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்











Click it and Unblock the Notifications