குஜராத்தில் பாஜக ஆட்டம் க்ளோஸ்.. இனி எங்க ராஜ்ஜியம் தான்.. உளவுத்துறையே சொல்லிட்டு..கெஜ்ரிவால் பளீச்
அகமதாபாத்: குஜராத்தில் இன்று தேர்தல் நடந்தால் கூட ஆம் ஆத்மி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் இதனால் பாஜக அங்கு ஆட்சி அமைக்காது என்றும் உளவுத்துறையின் அறிக்கையை வைத்து அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. பஞ்சாபில் ஆட்சி அமைத்த உற்சாகத்துடன் குஜராத் பக்கமும் தனது கவனத்தை கெஜ்ரிவால் திருப்பியிருக்கிறார்.
குஜராத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி அரியணையில் இருக்கும் பாஜகவை வீழ்த்த அனல் பறக்கும் பிரசாரங்களை அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார்.

மும்முனை போட்டி
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை அசைத்து பார்க்க வியூகம் வகுத்து வரும் கெஜ்ரிவால், இதற்காக அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சதாவை பொறுப்பாளராக நியமித்து காய் நகர்த்தல்களை தொடங்கியிருக்கிறார். இதனால் குஜராத்தில் இந்த முறை மும்முனை போட்டி இருக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மூன்று கட்சிகளும் தற்போதே தேர்தல் பணியை துவங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

வாட்டர் பாட்டில் வீசப்பட்டது
அதிலும், ஆம் ஆத்மி ஒருபடி மேலே போய் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அங்கு பிரசாரம் மேற்கொண்டர். இன்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் நேற்று கெஜ்ரிவால் ராஜ்கோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்ற போது கெஜ்ரிவாலை நோக்கி வாட்டர் பாட்டில் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம் ஆத்மி தான் வெற்றி பெறும்
இப்படி குஜராத்தில் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது:- குஜராத்தில் இன்று தேர்தல் நடந்தால் கூட ஆம் ஆத்மி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உளவுத்துறையின் அறிக்கை கூறுகிறது. இருந்தாலும் சிறிய அளவிலான வெற்றிதான் கிட்டும் என்று உளவுத்துறை அறிக்கை கூறுகிறது. எனவே, குஜராத் மக்கள் பெருமளவு ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் பெரும்பான்மையை எளிதில் தாண்டி ஆட்சியை பிடிக்க முடியும்.

பாஜக அதிர்ச்சி
உளவுத்துறை அறிக்கையை பார்த்ததில் இருந்தே அதிர்ச்சி அடைந்த பாஜக - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கைகோர்த்து உள்ளன. குறிப்பாக பெரும் பதற்றம் அடைந்துள்ள பாஜக, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. அப்போது தான் எதிர்ப்பு வாக்குகள் பிரியும் என்பது பாஜகவின் திட்டம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications