மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கு .. நாளை மறு நாள் தேர்தல்
கொல்கத்தா : மேற்கு வங்கம், அசாமில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உளள்து.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.. இதில் முதல் கட்டமாக புர்லியா, பாங்குரா, ஜார்கிராம், புர்பா, மெதினாபூர், பஸ்சிம் மெதினாபூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் க்குப்பதிவு நடைபெற போகிறது இதையடுத்து தேர்தல் வாக்குப்பதிவுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என்பதால் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடித்துக் கொள்ளப்பட்டது.

தேர்தல் நடைபெற்ற 30 தொகுதிகளும் பழங்குடி மக்கள் அதிக அளவு வசிக்கும் தொகுதிகள் ஆகும். இங்கு உள்ள லோக்சபா தொகுதிகளில் பாஜக கடந்த 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் எப்படியும் சட்டமன்ற தேர்தலிலும் வெல்லும் முனைப்பில் பாஜக செயல்படுகிறது.
அசாமில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்ட தேர்தல் 12 மாவட்டங்களில் 47 தொகுதிகளுக்கு நாளை மறு நாள் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடித்துக் கொள்ளப்பட்டது.
47 தொகுதிகளல் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 264 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பார்ச்சல்லா, தேஜ்பூர், பிஸ்வநாத், கும்தாய், ரங்கபாரா, நசிரா, மரியானி, கோலாகாட் உள்பட 47 தொகுதிகளுக்கு அஸ்ஸாமில் தேர்தல் நாளை மறுதினம்(மார்ச் 27) நடைபெறுகிறது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications