பண்டிகை கொண்டாட ஊருக்கு திரும்பிய அதிமுக தொண்டர்கள்: பெங்களூர் மத்திய சிறை வளாகம் வெறிச்சோடியது
பெங்களூர்: பண்டிகை காலம் நடைபெறுவதால் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் குவிந்திருந்த அதிமுகவினர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதனால் சிறைச்சாலை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிதா, கடந்த சனிக்கிழமை முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்றுடன் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு ஏழு நாட்கள் ஆகிவிட்டன. சிறையில் அடைக்கப்பட்ட மறுநாள் முதல் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் அதிமுக தொண்டர்கள் கூட்டம் குவிந்தது.

அம்மாவை விடுதலை செய், கருணாநிதி ஒழிக என்று கோஷங்களை எழுப்பியபடி அதிமுக தொண்டர்கள் உருண்டு, புரண்டு அழுது கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு தொண்டர்களில் பலரும் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். ஒரு சிலர் மட்டும் பரப்பன அக்ரஹாராவில் தென்படுகின்றனர். அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் ஊருக்கு போனவர்கள் மீண்டும் இங்கு வந்து தர்ணா நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் வேலுமணி ஆகியோர் இன்று பரப்பன அக்ரஹாரா வந்திருந்தனர். ஆயினும் ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்திக்கவில்லை என்பதால், இவர்களையும் சந்திக்க மறுத்துவிட்டார். எனவே அவர்களும் திரும்பிச் சென்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications