பெங்களூர் ஏரியில் பொங்கும் ராட்சத நச்சு நுரை... ஹாலிவுட் கிராபிக்ஸை மிஞ்சும் காட்சிகள்!
பெங்களூரு : பெலந்தூர் ஏரி சுத்தப்படுத்துவதற்காக நடைபெற்ற பணிகள் நேற்று பெய்த மழை காரணமாக வீணாகிப் போயுள்ளன, இரண்டு அடுக்கு மாடி உயரத்திற்கு எழும்பிய நுரையை அகற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பெங்களூரின் பிரசித்தி பெற்ற பெலந்தூர் ஏரி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த நீர் நிலையில் பிளாஸ்டிக், குப்பைகளால் மாசு ஏற்பட்டதால் அதன் நீர் வற்றி கடந்த மூன்று மாதங்களாக காய்ந்த புற்களுடன் காட்சியளித்தது. அருகில் இருந்த ஆலைகளின் கழிவுகளால் இந்த ஏரி மாசுபட்டதையடுத்து பசுமைத் தீர்ப்பாய நீதிமன்றம் அனைத்து தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டது. இதையடுத்து ஏரியை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. கடந்த திங்கட்கிழமை இந்தப் பணிகள் நடைபெற்ற ஓரளவு சுத்தம் செய்யப்பட்ட போதும், இரவு பெய்த மழை காரணமாக ஏரியில் இருந்த கழிவுகள் நுரைக்கத் தொடங்கியுள்ளது.

ஆனால் இந்த முறை கிளம்பிய நுரையானது இரண்டு அடுக்கு மாடிகட்டிட உயரத்திற்கு வந்ததால் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இந்த ஏரியை சுத்தப்படுத்தும் பொறுப்பில் உள்ள பெங்களூரு வளர்ச்சி மேம்பாட்டு கழகம் ஏரியில் கிளம்பும் நுரையை வடிகட்டி தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்த முறை ஏரி நுரைத்து பொங்குவதற்கு வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் உள்ள டிடர்ஜென்ட்டுகளக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏரிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் கழிவு நீரை நேரடியாக ஏரியில் கலக்காமல் தனியான கழிவுநீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீண்ட நாட்களாகவே குடியிருப்பு வாசிகளுக்கு இந்த கோரிக்கையை நிபுணர்கள் குழு விடுத்து வருகிறது. அவர்கள் அதனை கவனத்தில்
கொள்வதில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே திங்கட்கிழமை பெய்த கனமழையில் ஏரி நுரையை கக்கியுள்ளதாகவும் கூறுகின்றனர். ஏரி இதுவரை இந்த அளவிற்கு நுரைத்து பார்த்ததில்லை, என்றும் கிராபிக்ஸ் காட்சிகளில் வருவது போல 2 அடுக்கு மாடி கட்டிடம் உயரத்திற்கு நுரை பொங்கியுள்ளதாக இதனை நேரில் பார்த்தவர்கள் விளக்கியுள்ளனர். இந்நிலையில் நுரையை அகற்றி ஏரியை அசுத்தப்படுத்தும் கழிவுகள் நுழைவதை கட்டுப்படுத்தவும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications