பயணிகளை வேகமாக 'செக்' செய்ய புது வசதி.. நாட்டில் முதல் முறையாக பெங்களூர் ஏர்போர்ட்டில் அறிமுகம்
இந்தியாவில் முதல் முறையாக ஆதார் கார்ட் மூலம் உள்நுழையும் வசதியை ஏற்படுத்தியுள்ளது பெங்களூர் ஏர்போர்ட்.
பெங்களூர்: இந்தியாவில் முதல் முறையாக ஆதார் கார்ட் மூலம் உள்நுழையும் வசதியை ஏற்படுத்தியுள்ளது பெங்களூர் ஏர்போர்ட். இதன்படி ஆதார் கார்டை ஸ்கேன் செய்து அதன்முலம் போர்டிங் பணிகளை எளிதாக முடித்துக் கொள்ளலாம் என பெங்களூர் சர்வதேச விமான நிலையத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாடு செல்லும் விமானங்களிலும் போர்டிங் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
பெங்களூரில் இருக்கும் கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்னும் சில நாட்களில் ஆதார் கார்ட் மூலம் போர்ட்டிங் பணிகளை முடிக்கும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் முதல் முறையாக இந்த வசதி ஏற்படுத்தப் படவுள்ளது.

இதன்படி ஆதார் கார்ட் உள்ளவர்கள் தங்களது கண்களை போர்டிங்கின் போது ஸ்கேன் செய்தோ இல்லை விரல் ரேகைகளை பதித்தோ எளிதாக உள்ளே நுழையலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது நேரத்தையும் , சரிபார்ப்பு பணிகளையும் மிகவும் எளிமையாக முடிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேழும் இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கும், பழைய பாரம்பரியமான நேரம் எடுக்கும் சோதனைகள் செய்யப்படாது என கூறப்படுகிறது.
பெங்களூர் ஏர்போர்ட்டை தொடர்ந்து விரைவில் மற்ற விமான நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. பெங்களூர் ஏர்போர்ட்டில் இன்னும் 90 நாட்களுக்குள் இந்த வசதி தொடக்கத்திற்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் பெங்களூர் ஏர்போர்டில் போர்டிங் செய்ய ஆதார் கட்டாயம் ஆக்கப்படவில்லை . ஆதார் இல்லாதவர்கள் பழைய சோதனை முறைகளைச் சந்திப்பர். இதன் மூலம் இந்திய விமானங்களுக்கு மட்டும் இல்லாமல் வெளிநாட்டு விமானங்களுக்கும் மிகவும் எளிதாக போர்டிங் செய்யலாம் என பெங்களூர் சர்வதேச விமான நிலையத் துறை தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications