ராகுலுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை: பாஜக தாக்கு
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் வெளிநாட்டில் பொழுதை கழிப்பதை விட்டுவிட்டு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி தலைநகரில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
மே மாதத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிரதமர் பி.ஆர். வேலை பார்க்கிறார். அவர் பி.ஆர். ஸ்டண்டுகளை செய்கிறார். அதனால் ஒரு பலனும் இல்லை. இந்த வேலையை அவர் எப்பொழுது நிறுத்திவிட்டு நிஜமான வேலையை துவங்குவார் என மக்கள் கேட்கிறார்கள். மோடி ஏழைகளை புறக்கணித்துவிட்டு தொழில் அதிபர்களை தான் கவனிக்கிறார் என்றார்.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறுகையில்,
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே ராகுல் காந்திக்கு தெரியவில்லை. அவருக்கு பயிற்சி தேவை என்று நினைக்கிறேன். ராகுலுக்கு பொது சேவைக்கும் பி.ஆர். வேலைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் மோடியின் பணியை பாராட்டுகிறார்கள். ஏழை மக்களுக்காக 5 கோடி வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. புதிய கேஸ் இணைப்புகளுக்கு மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு சென்று பொழுதை கழிப்பதை நிறுத்திவிட்டு இங்கு தங்கி என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications