புறா செய்த அக்கப்போற பாருங்க.. துண்டுச்சீட்டுடன் இந்தியா வந்த.. பாகிஸ்தான் புறா மீது வழக்குப்பதிவு?
அமிர்தசரஸ்: பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்கு துண்டு சீட்டுடன் பறந்து வந்த ஒரு புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சுதந்தரம் அடைந்ததில் இருந்தே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை
பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. இதனால் இந்திய எல்லைக்குள் மர்ம நபர்கள் யாரும் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக ராணுவத்தினர் இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் அனைத்து பகுதியிலும் தீவிர பாதுபாப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

துண்டு சீட்டுடன் வந்த புறா
இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரோரோவாலா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த புறா ஒன்று பாதுகாப்பு படை வீரரின் தோளில் வந்து அமர்ந்தது. அந்த புறாவின் காலில் கட்டப்பட்டு இருந்த ஒரு துண்டுச் சீட்டில் ஒரு செல்போன் எண் எழுதப்பட்டு இருந்தது கண்டு பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வழக்குப்பதிவு செய்யுங்கள்
இதனை தொடந்து வீரர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெவித்தனர். உயர் அதிகாரிகள் அந்த புறாவை கங்கார்ஹ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். துண்டு சீட்டுடன் பறந்து வந்த புறா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் போலீசாரிடம் தெரிவித்தனர். ஒரு மனிதர் எல்லை பகுதியில் இருந்து இந்தியாவுக்கு அத்துமீறி வந்தால் சட்டத்த்தின்படிஅவரை கைது செய்து விசாரணை நடத்தலாம்.

விழிபிதுங்கி நிற்கும் போலீசார்
ஆனால் துண்டு சீட்டுடன் பறந்து வந்த புறாவை கைது செய்ய முடியுமா? இல்லை அதனிடம் விசாரணைதான் நடத்த முடியுமா? என்னய்யா இது? என்று விழிபிதுங்கி நிற்கின்றனர் பஞ்சாப் போலீசார். புறா மீது வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என்று மாநில சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனராம். இது தவிர புறா கொண்டு வந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நம்பர் யாருடையது? புறாவை அனுப்பியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகினற்னர். பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா தற்போது ஒரு குற்றவாளியாய் காவல் நிலையத்தில் சோகத்துடன் அமர்ந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications