புறா செய்த அக்கப்போற பாருங்க.. துண்டுச்சீட்டுடன் இந்தியா வந்த.. பாகிஸ்தான் புறா மீது வழக்குப்பதிவு?
அமிர்தசரஸ்: பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்கு துண்டு சீட்டுடன் பறந்து வந்த ஒரு புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சுதந்தரம் அடைந்ததில் இருந்தே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை
பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. இதனால் இந்திய எல்லைக்குள் மர்ம நபர்கள் யாரும் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக ராணுவத்தினர் இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் அனைத்து பகுதியிலும் தீவிர பாதுபாப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

துண்டு சீட்டுடன் வந்த புறா
இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரோரோவாலா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த புறா ஒன்று பாதுகாப்பு படை வீரரின் தோளில் வந்து அமர்ந்தது. அந்த புறாவின் காலில் கட்டப்பட்டு இருந்த ஒரு துண்டுச் சீட்டில் ஒரு செல்போன் எண் எழுதப்பட்டு இருந்தது கண்டு பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வழக்குப்பதிவு செய்யுங்கள்
இதனை தொடந்து வீரர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெவித்தனர். உயர் அதிகாரிகள் அந்த புறாவை கங்கார்ஹ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். துண்டு சீட்டுடன் பறந்து வந்த புறா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் போலீசாரிடம் தெரிவித்தனர். ஒரு மனிதர் எல்லை பகுதியில் இருந்து இந்தியாவுக்கு அத்துமீறி வந்தால் சட்டத்த்தின்படிஅவரை கைது செய்து விசாரணை நடத்தலாம்.

விழிபிதுங்கி நிற்கும் போலீசார்
ஆனால் துண்டு சீட்டுடன் பறந்து வந்த புறாவை கைது செய்ய முடியுமா? இல்லை அதனிடம் விசாரணைதான் நடத்த முடியுமா? என்னய்யா இது? என்று விழிபிதுங்கி நிற்கின்றனர் பஞ்சாப் போலீசார். புறா மீது வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என்று மாநில சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனராம். இது தவிர புறா கொண்டு வந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நம்பர் யாருடையது? புறாவை அனுப்பியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகினற்னர். பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா தற்போது ஒரு குற்றவாளியாய் காவல் நிலையத்தில் சோகத்துடன் அமர்ந்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications