மக்களே.. முதல்ல.. அரசியல்வாதிகளை கொளுத்துங்க!!.சர்ச்சை பேச்சில் சிக்கிய உ.பி. அமைச்சர்
அலிகார்: இந்து,முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை கொளுத்துங்கள் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பார் தெரிவித்த கருத்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சுகல்தேவ் பகுஜன் சமாஜ் என்ற கட்சி இடம்பெற்றிருக்கிறது. அதன் தலைவர் ராஜ்பார். ஆளும் கூட்டணியில் இருப்பதால் அவரும், அவர் பேசும் பேச்சும் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம்.

இப்போது அவர் புதியதாக ஒரு கருத்தை கூறி அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார். அந்த வகையில், மத ரீதியாக வேற்றுமையை உண்டுபண்ணி மக்களை தூண்டி, கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல் வாதிகளை மக்களே எரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
அலிகாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தான் அவ்வாறு இதுபோன்று பேசியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இதுவரை இந்து, முஸ்லிம் கலவரத்தில் எந்த ஒரு அரசியல் பிரமுகராவது உயிரிழந்துள்ளாரா? எந்த அரசியல் பிரமுகரும் மதக்கலவரத்தில் ஏன் இறப்பதில்லை?
மத ரீதியாக வேற்றுமையை உண்டு பண்ணி மக்களைத் தூண்டிவிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை மக்களே எரிக்க வேண்டும்.மக்களே.. நீங்க அவ்வாறு செய்ய வேண்டும்.
அப்போதுதான் இனி நாம் கலவரத்தில் யாரையும் எரிக்கக் கூடாது என்பதை அந்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்வார்கள்.
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளே... இந்திய அரசியல் சாசனத்தின்படி தேர்தலில் ஓட்டு போடுபவர்கள் இந்தியர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் பேசிய ராஜ்பார், "பாஜக விரும்பவில்லை என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகிக் கொள்ள தயாராக இருக்கிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications