தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவே அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறது.. தமிழகமோ பிளவுபட்டு கிடக்கிறது
பெங்களூர்: காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்துவரும் கர்நாடகாவே, நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில், தண்ணீர் கேட்கும் தமிழகமோ அதுபோன்ற எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
நடுவர் மன்ற தீர்ப்புபடி, காவிரியிலிருந்து அக்டோபர் மாதத்தில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம். வறட்சியை காரணம் காட்டி இதுவரை கர்நாடகா அந்த அளவு தண்ணீர் தரவில்லை.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் சில தினங்கள் முன்பு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக முதல்வர் நாளை மறுநாள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
தமிழகம் நெருக்கடி தருவதால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.
அதேநேரம், கண்டிப்பாக தண்ணீர் தேவை.. என்ற நிலையில் உள்ள தமிழக நலனுக்காக, அரசு எந்த விதமான அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டவில்லை.
தண்ணீர் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள தமிழக அரசுக்கு, கோர்ட்டிலேயே கர்நாடகா பதிலளிக்க முடியும். அதுதான் நடைமுறை. அதற்கும்கூட அனைத்து கட்சியை கூட்டி ஆலோசிக்கிறது கர்நாடகா. ஆனால், சட்டத்தால் மட்டுமின்றி, அரசியல் நகர்வுகளாலும் நெருக்கடி தர வேண்டிய தமிழக அரசோ மூச்சுவிடவில்லை.
நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்தில், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்களான சதானந்தகவுடா, அனந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் முடிந்த பிறகு அனைத்து கட்சி பிரமுகர்களும், மத்திய அமைச்சர்கள் தலைமையில் பிரதமரை சந்தித்து, தமிழக கோரிக்கையை நிராகரிக்க கோர வாய்ப்புள்ளது. ஆனால் இதுபோன்ற அரசியல் நெருக்கடியை தமிழகம் தர வேண்டுமானால் முதலில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக டெல்லி செல்ல வேண்டியது அவசியம்.
தமிழக சட்டசபையில் கூட ஒற்றுமையில்லாமல், அதிமுக-திமுக மோதிக்கொண்டுள்ள நிலையில், காவிரிக்காக இவ்விரு கட்சிகளும் ஒன்று சேருவது கேள்விக்குறியே.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications