காவிரி பிரச்சினை: கர்நாடகாவில் தனுசின் 'தொடரி' வெளியாவதில் சிக்கல்
பெங்களூர்: காவிரி நீர் பிரச்சனை காரணமாக தனுஷ் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தொடரி 'திரைப்படம் கர்நாடக திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நீர் பங்கீடு குறித்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக இப்போது வரை கர்நாடக மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. கர்நாடகாவிற்கு படப்பிடிப்புக்கு போனவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ் திரைப்படத்தை திரையிடுவது பிரச்சனையில்தான் முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் நினைக்கின்றனர்.

சில கன்னட அமைப்புகள் தமிழ் திரைப்படங்களை திரையிடக்கூடாது என தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி வருகிறதாம். எனவே பெரிய நடிகர் படம் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்கி, நஷ்டப்பட்டு, பிரச்சனையில் சிக்க கர்நாடக திரையரங்க உரிமையாளர்கள் தயாராக இல்லையாம்.
கிடாரி படம் ரிலீஸ் செய்யப்பட்ட தியேட்டர்களில் கலவரம் வெடித்ததால் படம் உடனடியாக நிறுத்தப்பட்டது. விக்ரம் நடித்த 'இருமுகன்' திரைப்படம் காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடக மாநிலத்தில் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படமான 'தொடரி' பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே செப்டம்பர் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக கர்நாடக திரையரங்குகளில் தொடரி வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
'கர' ஓடிடியில் பட்டையைக் கிளப்புது! ரிவ்யூவை நம்பி தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள் குமுறல்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications