கமிஷ்னரை கைது செய்ய வந்த சிபிஐ.. தர்ணாவில் குதித்த மமதா.. கொல்கத்தாவில் பெரும் பரபரப்பு!
கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையில் இருந்து தர்ணா போராட்டம் இருக்க போவதாக மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்து இருக்கிறார்.
Recommended Video

கொல்கத்தா: கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்து இருக்கிறார். தற்போது ராஜீவ் குமார் வீட்டில் மமதா பானர்ஜி முகாமிட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொல்கத்தாவை உலுக்கிய தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் இரண்டும்தான் தற்போது கொல்கத்தாவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம். தி ரோஸ் வேலி ஊழலில் 15,000 கோடி ரூபாயும், சாரதா ஊழலில் 2500 கோடி ரூபாயும் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.
இந்த ஊழலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உறுப்பினர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

புகார்
இந்த நிலையில்தான் இந்த புகாரில் கொல்கத்தா போலீஸ் கமிஷன் ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் பெயரும் சேர்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக இவரை விசாரிக்க சிபிஐ முயன்று கொண்டு இருந்தது. இவரை கைது செய்யும் திட்டத்திலும் சிபிஐ இருந்தது.

தடை இருக்கிறது
ஆனால் கொல்கத்தாவிற்குள் சிபிஐ நுழைய தடை இருக்கிறது. மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே அங்கு சிபிஐ நுழைய முடியும். அதே போல் மாநில அரசின் அனுமதி இல்லாமல் அங்கு யாரையும் சிபிஐ விசாரிக்க முடியாது. சில நாட்களுக்கு முன்பே இந்த தடை விதிக்கப்பட்டது.

இன்று நுழைந்தனர்
இந்த நிலையில் இன்று போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய அவரது இல்லம் நோக்கி 40 சிபிஐ அதிகாரிகள் வந்து இருக்கிறார்கள். இவர்கள் ஆனால் கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமாரின் வீட்டிற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர். தற்போது இதில் 15 சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தர்ணா இருக்கிறார்
இதை தொடர்ந்து தற்போது போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டிலேயே மமதா பானர்ஜி தர்ணா இருந்து வருகிறார். நாளையில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக தர்ணா இருக்க போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மோசம் என்றார்
சிபிஐ மத்திய அரசின் சொல்லை கேட்டு மோசமாக நடந்து வருகிறது. உலகில் இருக்கும் மிக முக்கியமான நல்ல போலீஸ் அதிகாரிகளில் ராஜீவ் குமாரும் ஒருவர். என்னுடைய காவல்துறையினரை நான்தான் பாதுகாப்பேன் என்று மமதா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார். இதனால் கொல்கத்தாவில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
நாளை க்ளைமேக்ஸ்.. சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்படும் மம்தா? திரிணாமுலில் பெரும் குழப்பம்! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications