சீனாவிற்கு பெரும் சிக்கல்.. மாஸ்க் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீர் தடை.. பரபரப்பு காரணம்!
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து N-95 ரக முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ளது.
Recommended Video
டெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து N-95 ரக முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ளது.
யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 258 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 11000 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

என்ன மாஸ்க்
இந்த நிலையில் சீனாவில் தற்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் எல்லோரும் முகத்தில் முகமூடி அணிந்து சுற்றி வருகிறார்கள். வைரஸ் பரவாமல் இருப்பதற்காக இவர்கள் எல்லோரும் முகமூடி அணிந்து வருகிறார்கள். இதற்காக N-95 ரக முகக் கவசம் பயன்படுத்தப்படுகிறது. இது கிருமிகள் பரவுவதை தடுக்கும். அதனால் இந்த மாஸ்க் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலையும் மிக அதிகம் ஆகும்.

விலை அதிகம்
தற்போது கெடுபிடி காரணமாக அங்கு மாஸ்க் விலை மொத்தமாக அதிகரித்துள்ளது. இதில் நிறைய முறைகேடுகளும் நடந்து வருகிறது. சீனாவில் மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருவதால் இந்தியாவில் இருந்துதான் மாஸ்க் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் இருந்துதான் மாஸ்க் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையை, சென்னையை சேர்ந்த பல நிறுவனங்கள் சீனாவிற்கு மாஸ்க் ஏற்றுமதி செய்கிறது. இதற்கான தேவை அதிகம் ஆகியுள்ளது.

ஆனால் தடை
இந்த நிலையில் இந்தியாவிலிருந்து N-95 ரக முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை மாஸ்க் ஏற்றுமதி செய்ய கூடாது. உற்பத்தி செய்யப்படும் மாஸ்குகள் நாட்டிற்குள் விற்பனை செய்யப்படலாம். மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம். ஆனால் சீனாவிற்கு அனுப்ப கூடாது. முற்றிலுமாக விமான, கப்பல் ஏற்றுமதியை இதற்காக இந்தியா தடை செய்து இருக்கிறது

என்ன நிலை
இந்தியாவில் மாஸ்க் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் இந்த நடவடிக்கை என்று மத்திய அரசு விளக்கி உள்ளது. இதனால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆகவே தற்போது சீனாவில் பாலிதீன் பைகள், குடிநீர் குடுவைகள், உள்ளாடைகள் போன்றவற்றை முகக்கவசங்களாக அணிந்து கொள்ளும் நிலை உருவானது. அங்கு மிக மோசமான மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications