டோக்லாம் சர்ச்சை: இந்தியாவின் கோழிக் கழுத்துக்கு சீனா குறி- வடகிழக்கு துண்டிக்கப்படும் அபாயம்!
சிலிகுரி: டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைத்துவிட்டால் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 'கோழிக் கழுத்து' என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கக் கூடிய சிலிகுரி பிராந்தியத்தை சீனா எளிதாக நெருங்கிவிடும் என்பதால்தான் இந்தியா கடும் உக்கிரத்தை வெளிப்படுத்தி வருகிறது.
டோக்லா பீடபூமி என்பது இந்தியா, பூடான் மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் முக்கிய பகுதியாகும். டோக்லா பீடம்பூமியை ஒட்டியதுதான் இந்தியாவின் கோழிக் கழுத்து எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி பிராந்தியமாகும்.
இந்த கோழி கழுத்து பகுதி பிராந்தியம்தான் இந்தியாவின் பிறபகுதிகளை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கக் கூடியதாகும். இதை ஆக்கிரமித்துவிட்டால் ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியமும் இந்திய பெருநிலப் பரப்பில் இருந்து எளிதாக துண்டிக்கப்பட்டு விடும்.

பூடானுக்கு ஆதரவு
டோக்லா பீடபூமி யாருக்கு என்பதில் சீனாவுக்கும் பூடானுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் சர்ச்சை. இதில் பூடானுக்கே சொந்தம் என்கிற நிலைப்பாடுடன் இருக்கிறது இந்தியா.

இந்தியாவின் அச்சம்
இதனால்தான் இப்போது சீனா சாலை அமைப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் இந்த சாலையை சீனா அமைத்துவிட்டால் கோழிக் கழுத்து பகுதிக்கு எந்த நேரத்திலும் சீனாவால் பேராபத்து நிகழலாம்; இதனால் வடகிழக்கு பிராந்தியத்தை இந்தியா இழக்கவும் நேரிடும் என்பதும் இந்தியாவின் அச்சம்.

அப்படியெல்லாம் இல்லை
இதனால்தான் இந்த சாலையை அமைக்கவிடாமல் தொடர்ந்து எதிர்ப்பதுடன் எல்லையில் படைகளையும் குவித்து வருகிறது இந்தியா. ஆனால் சீனாவோ, இந்தியாவின் கோழிக் கழுத்துக்கு நாங்கள் குறிவைக்கவில்லை.. இந்தியாதான் அப்படியான ஒரு பிரசாரம் மூலம் மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்துகிறது என்கிறது.

குஜராத்தின் ரான் ஆப் கட்ச்
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 1972-ம் ஆண்டு யுத்தத்தின் போது குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியைத்தான் பாகிஸ்தான் முதலில் தாக்கியது. ஏனெனில் இந்த எல்லைப் பகுதி என்பது சதுப்பு நிலத்தினூடே 100 கிலோ மீட்டர் பயணித்து செல்ல வேண்டிய இடம். இந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் யாரும் செல்லாத ஒரு எல்லைப் பகுதி. அன்று பாகிஸ்தானுக்கு ரான் ஆப் கட்ச் போல... இன்று சீனாவுக்கு இந்தியாவின் கழுத்து குறியாக இருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத கள யதார்த்தம்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications