மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ்.. ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு
மேகலாயாவின் அம்பாதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.
Recommended Video

ஷில்லாங்: மேகாலயாவின் அம்பாதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.
மேகாலயாவின் அம்பாதி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பாக வென்ற மியானி டி ஷிரா முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் மகள் ஆவார். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது 21 ஆகி உள்ளது.

மேகாலயா சட்டசபையில் மொத்தம் 60 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இங்கு பெரும்பான்மை பெற 31 பேர் தேவை. ஆனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இதற்கு முன் காங்கிரஸ் கட்சிக்கும், தேசிய மக்கள் கட்சிக்கு சரியாக 20 எம்எல்ஏ பலம் இருந்தது.
இதனால் ஆளுநர் தேசிய மக்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஐக்கிய ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைத்தது. தற்போது மேகாலயாவின் அம்பாதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.
தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி என்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ். அம்பாதி தொகுதியையும் சேர்த்து மேகாலயாவில் காங்கிரஸுக்கு 21 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் மேகாலயாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே கர்நாடகாவில் வெற்றிபெற்ற பெரும்பான்மை கொண்ட மஜத-காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல், ஆளுநர் வாஜுபாய் வாலா தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். இதனால் காங்கிரஸ் பீகார், கோவா,மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது, இப்பொது மேகாலயாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!











Click it and Unblock the Notifications