இணைப்புக்கு முரண்டு பிடிக்கும் டி.ஆர்.எஸ்... மிரட்டலுக்கு புது வியூகம் வகுக்கும் காங்கிரஸ்!
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் உருவாகிவிட்ட நிலையில் இணைவதாக கொடுத்த உறுதிமொழியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி( டி.ஆர்.எஸ்) நிறைவேற்றாததால் அக்கட்சியை மிரட்ட புதுவியூகம் வகுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கினால் தமது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியையே காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிடுவதாக கூறியவர் சந்திரசேகர்ராவ். தற்போது தெலுங்கானா உருவாகிவிட்டது.
இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரையும் சந்திரசேகர்ராவ் நேரில் சந்தித்து பேசினார். இதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸுடன் இணைந்துவிடும் என்று பேச்சுகள் எழுந்தன.
ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய்சிங் நேற்று கூட இரு கட்சிகளும் இணைவது என்பது முடிவான ஒன்று. ஆனால் எப்படி தொகுதிகளை பகிர்ந்து கொள்வது என்பதுதான் முடிவாகவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி எதிர்ப்பு தெரிவித்தது.
அப்படி ஒன்றும் நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைவதாக சொல்லவில்லையே என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறிவருகின்றனர். சந்திரசேகர்ராவைப் பொறுத்தவரையில் காங்கிரஸுடன் இணைந்துவிடலாம் என்று நினைத்தாலும் அவரது கட்சியின் 90% அதற்கு எதிர்ப்பாகவே இருக்கின்றனர்.
இதை உணர்ந்து கொண்ட காங்கிரஸ் இப்போது சந்திரசேகர் ராவ் கட்சியை மிரட்ட புதுவியூகம் வகுத்துள்ளது. தெலுங்கானா விவகாரத்தில் சந்திரசேகர் ராவ் கட்சியைவிட மிக வலுவாக போராடியது பேராசிரியர் கோதண்ட ராம் தலைமையிலான தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு. கோதண்ட ராம், உஸ்மானியா பல்கலைக் கழக பேராசிரியராக இருக்கிறார்.
இதில் மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கிய 20 பேர்தான் முக்கிய உறுப்பினர்கள். தற்போது இந்த குழுவை தமது பக்கம் வளைக்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவா நிர்வாகிகளை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் ராஜூ ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய்சிங்கை தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு சந்தித்து பேசக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதுவரை அரசியல் வடிவம் பெறாமல் இருந்த தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவை அரசியல் அமைப்பாக்கி அதன் மூலம் பெருமளவிலான வாக்குகளைக் கவருவதான் காங்கிரஸின் திட்டம். காங்கிரஸ் கட்சியின் இந்த புதிய வியூகத்தால் சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications