பின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறதாம்.. புலம்புகிறார் எடியூரப்பா!
பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முயல்வதாக எடியூரப்பா கண்டனம் தெரிவித்தார்.
Recommended Video

பெங்களூர்: பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என்று எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளில் காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது.
இதையடுத்து பாஜக தொண்டர்கள் ஆனந்த தாண்டவம் ஆடினர். எனினும் இவர்களது மகிழ்ச்சி சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீடித்தது.

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை
நேரம் ஆக ஆக எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் - ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைக்க ஆலோசனை நடத்தியது.

காங். - மஜத கூட்டணி
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறுகையில் பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முயல்கிறது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வந்த பிறகே ஆளுநர் முடிவு எடுப்பார்.

டென்ஷனில் எடியூரப்பா
சித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்துவிட்டார். ஆளுவோருக்கு எதிரான மனநிலையே காங்கிரஸில் தோல்விக்கு காரணம் ஆகும். காங்கிரஸை புறக்கணித்துவிட்டு பாஜகவைத்தான் மக்கள் ஏற்றுகொண்டுள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது.

என்ன செய்யப் போகிறது பாஜக
கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எனினும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

கோவா, மணிப்பூர், மேகலாயா
கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழி அரசியலையே தேர்ந்தெடுத்து ஆட்சி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கர்நாடகத்தில் அது பலிக்காமல் போய் விடும் போல தெரிகிறது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications