பின்வாசல் வழியாக காங். ஆட்சிக்கு வர முயற்சிக்கிறதாம்.. புலம்புகிறார் எடியூரப்பா!
பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முயல்வதாக எடியூரப்பா கண்டனம் தெரிவித்தார்.
Recommended Video

பெங்களூர்: பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது என்று எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளில் காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது.
இதையடுத்து பாஜக தொண்டர்கள் ஆனந்த தாண்டவம் ஆடினர். எனினும் இவர்களது மகிழ்ச்சி சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீடித்தது.

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை
நேரம் ஆக ஆக எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் - ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைக்க ஆலோசனை நடத்தியது.

காங். - மஜத கூட்டணி
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறுகையில் பின்வாசல் வழியாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முயல்கிறது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வந்த பிறகே ஆளுநர் முடிவு எடுப்பார்.

டென்ஷனில் எடியூரப்பா
சித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்துவிட்டார். ஆளுவோருக்கு எதிரான மனநிலையே காங்கிரஸில் தோல்விக்கு காரணம் ஆகும். காங்கிரஸை புறக்கணித்துவிட்டு பாஜகவைத்தான் மக்கள் ஏற்றுகொண்டுள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது.

என்ன செய்யப் போகிறது பாஜக
கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எனினும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

கோவா, மணிப்பூர், மேகலாயா
கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழி அரசியலையே தேர்ந்தெடுத்து ஆட்சி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கர்நாடகத்தில் அது பலிக்காமல் போய் விடும் போல தெரிகிறது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications