பால் கொடுத்த நர்ஸ்.. "நைட் நேரம்.. குழந்தை கதறல் தாங்க முடியவில்லை.. அதான்".. உருக வைக்கும் சம்பவம்
குழந்தைக்கு தாய்ப்பால் தந்த நர்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
கொல்கத்தா: பசியால் குழந்தை கதறியதை என்னால் தாங்கவே முடியவில்லை.. அதனால்தான் பால் கொடுத்தேன்" என்று நர்ஸ் ஒருவர் உருக வைத்துள்ளார்.
Recommended Video
கொல்கத்தாவில் ஆர்.ஜி.மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.. அவருக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், என்ன காரணத்தினாலோ, அந்த பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை... வழக்கமாக இப்படி தாய்மார்களுக்கு பிரச்சனை என்றால், அதே ஆஸ்பத்திரியில் இருக்கும் குழந்தை பெற்ற பெண்கள் பால் தருவார்கள்.. ஆனால் இது கொரோனா தொற்று காலம் என்பதால், அப்படியும் குழந்தைகளுக்கு யாராலும் தாய்ப்பால் தர முடிவதில்லை.. வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அப்படி செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு குழந்தை பசியால் அழுதுள்ளது.. நேரம் ஆக ஆக அந்த குழந்தையின் கதறல் அதிகமாகி கொண்டே போனது.. அப்போது அதே ஆஸ்பத்திரியில் நர்ஸ் உமா என்பவர் வேலை பார்த்து வருகிறார்.. அவர் சமீபத்தில்தான் குழந்தை பெற்றிருந்தார்.. நேற்றிரவு நைட் டியூட்டியில் இவர் இருந்தபோது குழந்தையின் அழுகையை பொறுத்து கொள்ள முடியாமல், ஓடிவந்து குழந்தையை வாரியணைத்து தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
பால் கொடுத்து கொண்டிருந்தபோது, திடீரென அவரது கணவர் நர்சுக்கு போன் செய்துள்ளார்.. அப்போது, பசியால் குழந்தை அழுததை தன்னால் தாங்கவே முடியவில்லை, அதனால் பால் தந்து கொண்டிருப்பதாக சொன்னார். அதற்கு அவரோ, "குழந்தைக்கு உரிய பாதுகாப்புடன் பால் கொடுக்கும்படி சொல்லி உள்ளார்.
எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் குழந்தைக்கு பால் கொடுப்பதாகவும், காலையில் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் நர்ஸ் அவருக்கு பதிலளித்தார். செவிலியரின் இந்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.
மண்ணில் இன்றுவரை உயிர்ப்புடன் இருப்பது உயிர்ப்பால் மட்டும்தான்.. உலகம் முழுவதும் தாய்மையும், தாய்ப்பாலும் ஒரே தரமல்லவோ
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications