பெருமிதப்பட வைக்கும் மனிதாபிமான குஜராத் மாடல்... வயிற்று பசி தீர்க்கும் விதம் விதமான "Roti Banks"
சூரத்/ ராஜ்கோட்: கொரோனா லாக்டவுன் காலம் நமக்கு எத்தனையோ துயரம் தோய்ந்த பக்கங்களை காட்டியிருந்தாலும் ஈர நெஞ்சுடன் கூடிய மனிதாபிமான முகங்களை ஒவ்வொரு தருணத்திலும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதனால்தான் மனிதம் மீதான நம்பிக்கை ஒருபோதும் குறையாமல் சுடர் விட்டு பிரகாசிக்கிறது.
கொரோனா லாக்டவுன் என்பது இந்தியர்களின் வாழ்வில் ஒரு மிரட்சியான இருட்டு நிறைந்த வாழ்க்கை. அதுவும் இன்றைக்கு உழைத்தால்தான் இன்றைய உணவு என்கிற அன்றாடங் காய்ச்சிகளுக்கு நினைக்கவே நெஞ்சை நடுங்க செய்யும் பகல் இரவுகள்.
கையில் கிடைத்ததை வைத்து ஒரு தொழிலை செய்து பிழைத்து கொண்டிருந்தவர்கள் விழிபிதுங்கி நின்றார்கள். இனி என்னவாகுமோ எதிர்காலம்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அவர்களது பகலும் இரவும் கடந்தது. இப்படி துயரங்கள் சூழ் உலகில் உணவு தேவையை யார் பூர்த்தி செய்துவிட முடியும்? அத்தனை பேருக்குமே அரசால் அத்தனையையும் செய்துவிட இயலாது என்பதை அனைவருமே அறிவர்.

குஜராத் ரொட்டி வங்கிகள்
ஆகையால் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என சாத்தியமானவற்றை ஒவ்வொருவரும் வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இத்தகைய மகத்தான மனித நேய பணிகளுக்கு மனம் மட்டும் இருந்தால் போதும். நிச்சயம் செய்துவிட முடியும் என்பதற்கான முன்னுதாரணங்களில் குஜராத்தின் ரொட்டி வங்கிகளுக்கு மிக முக்கியம் இடம் உண்டு. ஆம் லாக்டவுன் காலத்தில் ஏழைகளின் வயிற்று பசி தீர்த்தன இந்த எளிய முறையிலான ரொட்டி வங்கிகள்.

சூரத் ரொட்டி வங்கி
குஜராத்தில் லாக்டவுன் காலத்தில் கவனத்தை ஈர்த்தவை ரொட்டி வங்கிகள்- Roti Banks. நீங்கள் வசிக்கும் குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் உங்கள் வீட்டுக்கு ரொட்டி தயாரிக்கும் போது அதிகபட்சம் 5 ரொட்டிகளை கூடுதலாக தயார் செய்யுங்கள் அது போதும். இப்படி வீட்டுக்கு 5 ரொட்டி என்று சேகரித்து அப்பகுதியில் இல்லாத ஏழைகளுக்கு உணவளிக்கிறார்கள். இது சூரத்தின் ரொட்டி வங்கி முகம்.

ராஜ்கோட் ரொட்டி வங்கி
ராஜ்கோட்டில் விதம் விதமாக ரொட்டி வங்கிகள் வலம் வருகின்றன. தொண்டு நிறுவனங்கள் ஒரு இடத்தில் முகாம் இடுகிறார்கள். நீங்கள் வீடுகளில் எத்தனை ரொட்டிகளை தயார் செய்ய முடியுமோ கொண்டு வந்து தரலாம். அதனை பெற்றுக் கொண்டு பசித்த வயிறுகளிடம் கொடுத்து பால் வார்க்கிறார்கள். இதேபோல் நடமாடும் ரொட்டி வங்கிகள்.

நடமாடும் ரொட்டி வங்கிகள்
நமது ஊர்களில் நடமாடும் காய்கறி கடைகளை பார்த்திருப்போம்.. குஜராத்தில் நடமாடும் ரொட்டி வங்கிகள் வலம் வருகின்றன. வீடுகள் தோறும் சென்று ரொட்டிகளை நேரடியாக வண்டிகளில் சேகரிக்கிறார்கள். அதை அப்படியே ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டு அடுத்த ரவுண்டுக்குப் போகிறார்கள். இப்படியான ரொட்டி வங்கிகள்.. ஏதோ பசிதீர்த்த காரியத்தை மட்டும் செய்துவிடவில்லை.. குஜராத் மாநிலத்தின் எத்தனையோ கறைபடிந்த முகங்களை தூய்மைப்படுத்தியிருக்கிறது என்பதும் நிதர்சனம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications