1636 பலாத்காரங்கள்… 517 கொலைகள் - குற்றங்களில் தலைநகரான டெல்லி
டெல்லி: நாட்டின் தலைநகராக உள்ள டெல்லி குற்றங்களின் தலைநகரமாகவும் மாறி வருகிறது.கடந்த ஆண்டுமட்டும் 1636 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
அதோடு 517 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் தேசிய குற்றப்பதிவுகள் ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 706 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த (2013) ஆண்டில் இந்த எண்ணிக்கை இருமடங்கை விட கூடுதலாக அதிகரித்து, 1636 ஆக உயர்ந்துள்ளது.
2013ம் ஆண்டில் 517 கொலைகள், 532 கொலை முயற்சிகள், 144 வரதட்சணை கொடுமை மரணங்கள், 3609 ஆள் கடத்தல் ஆகியவை டெல்லியில் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுகள் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களின் மீதான வன்முறை
2013ம் ஆண்டு பெண்களின் மீதான வன்முறை சம்பவங்கள் மட்டும் 3,609 நடைபெற்றுள்ளன. அதில் 144 வரதட்சணைக் கொலைகள் ஆகும். கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக 3033 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2012ஆம் ஆண்டில் பெண்களின் மீதான வன்முறை வழக்குகள் 2,160 பதிவாகியுள்ளன. அதில் 134 வரதட்சணை கொலைகள், 1985 வழக்குகள் கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகள் மீதான வன்முறை
7,199 வழக்குகள் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. இதுவே 2012ம் ஆண்டில் 4,462 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

பலாத்கார சம்பவங்கள்
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு 1636 பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுவே 2012ம் ஆண்டு 706 பலாத்கார வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

517 கொலைகள்
கடந்த ஆண்டு 517 கொலைகள் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

திருட்டு, கொள்ளைகள்
9,710 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2012ம் ஆண்டினை விட அதிகமாகும். 2012ம் ஆண்டில் 8,996 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.

குற்றங்களின் தலைநகரம்
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் கொதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தலைநகர் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்துவருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications