ஃபனி புயல் இன்றிரவு மேற்கு வங்கத்தை தாக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கொல்கத்தா: இன்று இரவு 8.30 மணிக்கு ஃபனி புயல் மேற்கு வங்கத்தை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் 240கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்து கரையை கடந்தது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஃபனி புயல் பூரி அருகே கரையை கடந்தது. காலை 8 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய புயல் காலை 11 மணி அளவில் கரையை கடந்தது. ஃபனி புயலின் கண் பகுதி கரையை கடந்த போது மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக 245 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. ஒடிசாவில் கரையை கடந்த ஃபானி புயல் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனையடுத்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது அடுத்த 48 மணிநேரத்திற்கான அனைத்து பிரச்சார பயணங்களை ரத்து செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அசுர புயல் வீசியதை தொடர்ந்து, ஒடிசாவின் தலைமை செயலாளர், அனைத்து துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார். சாகிகோபால் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசியப் பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மீட்பு பணிகளுக்காக ஒடிசா விரைந்துள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications