Cyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி
அகமதாபாத்: டவ் தே புயல் காரணமாகக் குஜராத் மற்றும் டாமன் டையு மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்கிறார்.
அரபிக் கடலில் லட்சத்தீவுகள் உருவான அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களுக்கு முன் அதிதீவிர புயலாக வலுவடைந்தது.

டவ்-தே என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாகக் கேரளா கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் கன மழை பெய்தது. இந்த புயலின் கோரத் தாண்டவத்தால் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
டவ்-தே அதிதீவிர புயலானது நேற்று இரவு 8.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், டாமன் டையு உள்ளிட்ட மாநிலங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று டவ்-தே புயல் காரணமாகக் குஜராத் மற்றும் டாமன் டையு மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்கிறார். உனா, டியு, ஜஃபராபாத், மகுவா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை விமானம் மூலம் ஆய்வு செய்யவுள்ளார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தவுள்ளார்.
குஜராத்தின் சௌராஷ்டிரா அருகே கடந்த பிறகு டவ்-தே அதிதீவிர புயல் நேற்றிரவு தீவிர புயலாக வலுவிழந்தது. இந்நிலையில், அது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நள்ளிரவில் ராஜஸ்தானுக்குள் நுழையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்கள் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டவ் தே புயலால் வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கி 273 பேரை கொண்டிருந்த கப்பல் ஒன்று மும்பை அருகே கவிழ்ந்தது. இதில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 177 பேரை இந்தியக் கடற்படை மீட்டுள்ளது. காணாமல் போன 96 பேரைக் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications