டெல்லியில் பயங்கரம்: ஏ.டி.எம் காவலாளியை கொன்று ரூ.1.5 கோடி பணம் கொள்ளை
டெல்லி: டெல்லியில் பட்டப்பகலில் ஏ.டி.எம். காவலாளியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, பணம் ஏற்றி வந்த வங்கி வாகனத்தை வழிமறித்த மர்மநபர்கள் ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
வடக்கு டெல்லியில் கமலா நகர் பகுதியில் டெல்லி பல்கலைக்கழகம் அருகே வங்கி ஏ.டி.எம் உள்ளது. அதில் பணத்தை நிரப்புவதற்காக தனியார் வங்கி பணியாளர்கள், இன்று காலை 11 மணி அளவில் ஒரு வேனில் வந்தனர்.
அந்த வேன் ஏ.டி.எம். முன்னால் நிறுத்தப்பட்டது. அப்போது வேனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள், ஏ.டி.எம்.மிற்கு வெளியே காவலுக்கு நின்ற பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டனர்.
நடந்த சம்பவத்தை அறியும் முன்பாக ரூ. 1.5 கோடி பணம் அடங்கிய பெட்டியை வைத்திருந்த நபரை துப்பாக்கி முனையில் மிரட்டி, அதனை பிடுங்கிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
துப்பாக்கியால் சுடப்பட்ட பாதுகாவலரை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு,கொள்ளைச் சம்பவம் நடந்த போது அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு நபர் தனது மொபைல் கேமராவில் படம் பிடித்துள்ளார். அதில் பதிவாகி உள்ள காட்சிகளையும், ஏ..டி.எம்.-மிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீஸார் ஆராய்ந்து வருவதாகவும், கொள்ளையர்களை பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications