பிரசாத ஸ்டால்களில் கெட்டு போன உணவுகள்..மீண்டும் சர்ச்சையில் சிக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்
பிரசாத ஸ்டால்களில் கெட்டு போன உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தின் மீது பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருச்செந்தூர்: பிரசாத ஸ்டால்களில் கெட்டு போன உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தின் மீது பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துகுடி மாவட்டத்தில் உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். தற்போது கிறஸ்துமஸ்ஸையொட்டி விடுமுறை என்பதால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பெரும்பாலும் கோயில்களில் விற்கப்படும் உணவு பிரசாதங்களை பக்தர்கள் வாங்கி சாப்பிடுவதுண்டு. அது போல் அங்கு புட்டு மாவு மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

புட்டுமாவு
மிகவும் சுவையுடன் இருக்கும் இந்த புட்டு மாவு சர்க்கரை மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படுகிறது. இந்த மாவு அண்மைகாலமாக கெட்டு போனதாகவே விற்கப்படுகிறது என பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த மாவை சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் மாவிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது.

கெட்டு போகாது
பொதுவாக உணவு பொருட்களில் தயாரிக்கப்படும் காலமும் அதை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற காலமும் அச்சடிக்கப்படும். அதற்குள் அந்த பொருளை சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் இந்த புட்டுமாவுகளில் 3 மாத காலத்துக்குள் சாப்பிட வேண்டும் என்ற தேதி இருந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது கோயில் நிர்வாகத்தின் ஏமாற்று வேலை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

பக்தர்கள் வேதனை
கோயிலில் உள்ள பிரசாத ஸ்டால்களில் உள்ள பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து தீவிர சோதனை நடத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலன் காக்க திருச்செந்தூர் உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலில் பிரகார மண்டப சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பேச்சியம்மாள் என்ற பெண் பலியானார். இது அங்குள்ள பிரகாரங்களை நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்காததையே காட்டுகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications