பத்ம பூஷன் விருது பெற்றார் கிரிக்கெட் வீரர் டோணி.. ராணுவ உடையில் வலம் வந்தார்!
பத்ம பூஷன் அறிவிக்கப்பட்ட டோணி, தற்போது டெல்லியில் விருது பெற்று இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: பத்ம பூஷன் அறிவிக்கப்பட்ட டோணி, தற்போது டெல்லியில் விருது பெற்று இருக்கிறார்.
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்ம பூஷன் அறிவிக்கப்பட்ட டோணி, இன்று டெல்லியில் விருதை பெற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டோணிக்கு விருது வழங்கினார்.
#WATCH Billiards player Pankaj Advani and Cricketer MS Dhoni conferred with Padma Bhushan by President Ram Nath Kovind at Rashtrapati Bhawan in Delhi pic.twitter.com/XgPTHWsxBl
— ANI (@ANI) April 2, 2018
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாவது கட்ட பத்ம விருது வழங்கும் விழா நடக்கிறது. விழாவில் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.