டீக்கடைக்காரருக்கு ஸ்டார் ஹோட்டலில் டோணி விருந்து: தல தல தான்
கொல்கத்தா: கிரிக்கெட் போட்டியில் விளையாட கொல்கத்தா சென்ற டோணி தான் டிக்கெட் செக்கராக இருந்த காலத்தில் டீ குடித்த கடையின் உரிமையாளரை பார்த்ததும் அவரை அடையாளம் கண்டுகொண்டு விருந்து அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் தல டோணியை கொண்டாடுவதில் தவறே இல்லை. மைதானத்தில் அவர் விளையாடும் நேர்த்தி, காட்டும் பொறுமை, சக வீரர்களுடன் பழகும் விதம், மைதானத்தில் பணியாற்றும் துப்புரவாளர்களையும் சரிசமமாக பார்ப்பது உள்ளிட்ட நற்குணங்களால் தான் அனைவரும் டோணி டோணி என்று பாசமாக உள்ளார்கள்.
இந்நிலையில் டோணி தனது பெருந்தன்மையை மீண்டும் காண்பித்துள்ளார்.

கொல்கத்தா
விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாட டோணி கொல்கத்தா சென்றார். அங்குள்ள ஈடன் கார்டன் மைதானத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒருவரை பார்த்ததும் டோணி ஓடிப் போய் அவரை கட்டிப்பிடித்தார்.

டீக்கடைக்காரர்
டோணி கட்டிப்பிடித்த நபரின் பெயர் தாமஸ். அவர் மேற்கு வங்க மாநிலம் கராக்பூரில் டீக்கடை வைத்துள்ளார். டோணி டிக்கெட் செக்கராக இருந்தபோது தாமஸின் கடையில் தான் தினமும் டீ குடித்துள்ளார்.

விருந்து
டோணியை தூரத்தில் நின்றாவது பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கொல்கத்தா வந்த தாமஸை அவர் அடையாளம் கண்டுகொண்டதுடன் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டலில் விருந்தும் கொடுத்து தாமஸை அசத்தினார் தல.

டோணி டீ ஸ்டால்
டோணி குறித்து தாமஸ் கூறும்போது, டோணி பாய் கராக்பூரில் இருந்த போது டீ குடிக்க என் கடைக்கு தினமும் 2 அல்லது 3 முறை வருவார். நான் கராக்பூருக்கு திரும்பிச் சென்றவுடன் என் கடைக்கு டோணி டீ ஸ்டால் என்று பெயர் வைக்கப்போகிறேன் என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications