மஹாளய/பித்ரு பக்ஷத்தில் குற்றம் செய்யாதீர்... குற்றவாளிகளிடம் கைகூப்பி கேட்ட சுஷில் மோடி!
பாட்னா: பித்ரு பக்ஷம் நாட்களில் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று குற்றவாளிகளுக்கு பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி கைகூப்பி கேட்டுக் கொண்டார்.
பித்ரு பக்ஷம் என்பது 16 நாட்கள் இந்துக்களால் கடைபிடிக்கப்படும் ஒரு அசுப நாட்களாகும். இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை மேற்கொள்ளப்படும். இந்த நாட்களில் இறந்து போன அப்பா, தாத்தா, அவரது அப்பா, அம்மா, பாட்டி முதலான நமது குடும்பத்தில் நம்முடன் பல காலம் வாழ்ந்து, இறந்த பின்னால், பித்ருக்களாக வாழும் நமது முன்னோர்கள், அனைவரும் யம தர்மராஜாவால் ஏவப்பட்டு, நம்மைப் பார்த்து ஆசி வழங்க, நம் இருக்கும் பூலோகம் தேடி வரும் காலமே மஹாளய பக்ஷம் அல்லது பித்ரு பக்ஷம் எனப்படும்.

இந்த ஆண்டு பித்ரு பக்ஷம் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும். இந்த நாட்களில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் கூறுகையில் உங்களை இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். இந்த பித்ரு பக்ஷ காலத்தில் அனைத்து குற்றவாளிகளும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
மற்ற நாட்களில் நீங்கள் குற்றங்களை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில் பித்ரு பக்ஷம் கழித்து குற்றவாளிகள் குற்றங்களை செய்து கொள்ளலாம் என்கிறாரா சுஷில் மோடி.
கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் கிரிமினல்களிடம் கைகூப்பி வணங்குவது அவரது அரசுக்கு ஏற்படுத்தியுள்ள அவப்பெயராகும். திருவிழாக் காலங்களில் கடத்துவது, திருடுவது , சுட்டுக் கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications