கடலில் மூழ்கி 8 மாணவர்கள் பலி... சுற்றுலா சென்றபோது நேர்ந்த பரிதாபத்தால் குடும்பத்தினர் கதறல்!
மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்ற இன்ஜினியரிங் மாணவர்களில் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்ற இன்ஜினியரிங் மாணவர்கள் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 3 பேர் மாணவிகள் ஆவர்.
கர்நாடக மாநிலம் பெல்காமில் செயல்பட்டுவரும் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று சிந்துதர்க் மாவட்டம் வெய்ரி கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு சில மாணவ, மாணவிகள் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சற்று ஆழத்திற்குச் சென்ற மாணவர்கள், கடல் அலையில் சிக்கிக்கொண்டனர்.

3 பேர் மீட்பு
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் ஓடிச்சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் 3 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.

8 பேரின் உடல்கள் மீட்பு
இதையடுத்து மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் மீட்புப்படையினரும் அப்பகுதி மீனவர்களும் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. அவர்களில் 3 பேர் மாணவிகள் ஆவர்.

இருவர் கவலைக்கிடம்
கடலில் தத்தளித்த 19 பேர் அப்பகுதி மீனவர்கள் மற்றும் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட சோகம்..
சுற்றுலா சென்றபோது மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பை முருடு கடற்கரைக்கு சுற்றுலா வந்த 13 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறுப்பிடத்தக்கது.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications