அதிர்ச்சி... 8 மாத குழந்தையின் உயிரை பறித்த அமைச்சரின் ஊர்வலம்... ஆந்திராவில் சோகம்
அமராவதி: ஆந்திராவில் புதிதாக பதவியேற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உஷா ஸ்ரீசரண் ஊர்வலத்துக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உரிய நேரத்தில் மருத்துவமனை செல்ல முடியாமல் 8 மாத குழந்தை உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக செயல்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது அமைச்சரவையை முற்றிலுமாக மாற்றி அமைத்தார்.
இதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உஷா ஸ்ரீசரண் நியமிக்கப்பட்டார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முதலாக அவர் தனது தொகுதி நோக்கி புறப்பட்டார்.

தம்பதி தடுத்து நிறுத்தம்
இதையடுத்து அவருக்கு வரவேற்பு கொடுக்க கட்சியினர் ஏற்பாடு செய்தனர். மேலும் அவரது காரை பின்தொடர்ந்து தொண்டர்கள் பல கார்களில் அணிவகுத்தனர். இந்த ஊர்வலத்தின் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. அனந்தபூர் மாவட்டம் கல்யான்துர்கம் பகுதியில் அமைச்சரின் ஊர்வலத்துக்கு போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டதில் கணேஷ்-ஈஸ்வரப்பா தம்பதியும் சிக்கி கொண்டனர்.

8 மாத குழந்தை பலி
இவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்களின் 8 மாத குழந்தையை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தாமதமாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அமைச்சர் ஊர்வலத்தால்...
இதனால் குழந்தையின் உடலை பார்த்து கணேஷ் - ஈஸ்வரம்மா தம்பதி கதறி அழுதனர். மேலும் குழந்தைகளின் இறப்புக்கு அமைச்சரின் ஊர்வலம் தான் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த ஊர்வலத்தால் குழந்தையை அரை மணிநேரம் தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், இதனால் தான் குழந்தை இறந்ததாகவும் கூறி அழுதனர். மேலும் இதை கண்டித்து அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்தை நிறுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கொலை என குற்றச்சாட்டு
இதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் கண்டனம் தெரிவித்து கொலை என குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‛‛அமைச்சரின் ஊர்வலத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இது கொலையாகும். குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு இப்போது அரசு என்ன சொல்ல போகிறது '' என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications