தாத்ரி படுகொலை.... இன்னொரு எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்தார்
டெல்லி: டெல்லி அருகே மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் முதியவர் ஒருவரை மத வெறியர்கள் மிகக் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்னொரு எழுத்தாளரும் தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி வழங்கியுள்ளார்.
ஏற்கனவே புகழ் பெற்ற எழுத்தாளர் நயன்தாரா சேகல் இதே காரணத்திற்காக தனது சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி அளித்தார். தற்போது லலித் கலா அகாடமியின் முன்னாள் தலைவரான அசோக் வாஜ்பாயியும் தனது விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

கருத்துச் சுதந்திரம் மட்டுமல்லாமல் உயிர் வாழவும் இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை. எனவே எனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பித் தருகிறேன் என்று வாஜ்பாயி கூறியுள்ளார்.
தாத்ரியில் முஸ்லீம் முதியவர் ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி கொடூரமாக மத வெறிக் கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து குறிப்பிட்ட அவர், தாத்ரி சம்பவம் மிக மோசமானது, மகிழச்சி தரவில்லை. மதவாதிகள் தொடர்ந்து கொலைகளில் ஈடுபடுவது வருத்தம் தருகிறது. பிரதமர் மோடி இதுதொடர்பாக எதுவும் பேசாமல் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது.
சேகல் செய்தது சரிதான். பிரதமர் மிகவும் மோசமானமாவராக இருக்கிறார். எதற்குமே கருத்து சொல்லாமல் மெளனம் காப்பது அழகல்ல. இந்த நாட்டின் பன்முகத் தன்மை பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஏன் அவர் சொல்லாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார் வாஜ்பாயி.
74 வயதான வாஜ்பாயி இந்திக் கவிஞர், கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர் ஆவார். தாத்ரி சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் சிலர் கூறியுள்ள விளக்கங்களையும் வாஜ்பாயி நிராகரித்துள்ளார். இவையெல்லாம் நமது நாட்டின் பன்முகக் கலாச்சார, மத கட்டமைப்புக்கு வேட்டு வைப்பவை என்று அவர் கண்டித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications