தாத்ரி படுகொலை.... இன்னொரு எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்தார்
டெல்லி: டெல்லி அருகே மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் முதியவர் ஒருவரை மத வெறியர்கள் மிகக் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்னொரு எழுத்தாளரும் தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி வழங்கியுள்ளார்.
ஏற்கனவே புகழ் பெற்ற எழுத்தாளர் நயன்தாரா சேகல் இதே காரணத்திற்காக தனது சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி அளித்தார். தற்போது லலித் கலா அகாடமியின் முன்னாள் தலைவரான அசோக் வாஜ்பாயியும் தனது விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

கருத்துச் சுதந்திரம் மட்டுமல்லாமல் உயிர் வாழவும் இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை. எனவே எனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பித் தருகிறேன் என்று வாஜ்பாயி கூறியுள்ளார்.
தாத்ரியில் முஸ்லீம் முதியவர் ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி கொடூரமாக மத வெறிக் கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து குறிப்பிட்ட அவர், தாத்ரி சம்பவம் மிக மோசமானது, மகிழச்சி தரவில்லை. மதவாதிகள் தொடர்ந்து கொலைகளில் ஈடுபடுவது வருத்தம் தருகிறது. பிரதமர் மோடி இதுதொடர்பாக எதுவும் பேசாமல் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது.
சேகல் செய்தது சரிதான். பிரதமர் மிகவும் மோசமானமாவராக இருக்கிறார். எதற்குமே கருத்து சொல்லாமல் மெளனம் காப்பது அழகல்ல. இந்த நாட்டின் பன்முகத் தன்மை பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஏன் அவர் சொல்லாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார் வாஜ்பாயி.
74 வயதான வாஜ்பாயி இந்திக் கவிஞர், கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர் ஆவார். தாத்ரி சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் சிலர் கூறியுள்ள விளக்கங்களையும் வாஜ்பாயி நிராகரித்துள்ளார். இவையெல்லாம் நமது நாட்டின் பன்முகக் கலாச்சார, மத கட்டமைப்புக்கு வேட்டு வைப்பவை என்று அவர் கண்டித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications