அரசியலில் குதித்து தேவே கௌடா தொகுதியில் போட்டியா?: ஸ்ரீநாத் விளக்கம்
பெங்களூர்: தான் அரசியலுக்கு வரவில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரை உலக பிரபலங்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் இப்போதைய மதசார்பற்ற ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்பியும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத் நேரடியாக அரசியலுக்கு வருகிறார் என்று கூறப்பட்டது.
மேலும் அவர் பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்றும், தேவே கௌடா எம்.எல்.ஏ.வாக உள்ள கர்நாடக மாநிலம் ஹாஸன் தொகுதியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே வந்தது இல்லை. மேலும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றார்.
மைசூர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஸ்ரீநாத் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.