செக் புக்குகளை வாபஸ் பெறும் திட்டம் இல்லை... நிதி அமைச்சகம் விளக்கம்!
வங்கிகளில் பயன்படுத்தும் காசோலைகளை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலைகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் கடந்த வாரம் ஊடகங்களிடம் அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயத்தை தெரிவித்திருந்தார். அதில டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு எதிர்காலத்தில் வங்கிக் காசோலைகளைத் திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

அவ்வாறு வங்கிக் காசோலைகளுக்கு முடிவு எட்டப்பட்டால் அது வணிகர்களை வெகுவாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
The Government of India has reaffirmed that there is NO proposal under consideration to withdraw the bank Cheque Book facility.
— Ministry of Finance (@FinMinIndia) November 23, 2017
இந்நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு கருத்துகளை பதிவிட்டுள்ளது. அதில் வங்கிக் காசோலைகளை திரும்பப் பெற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகும தகவலில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
It had appeared in a certain section of media that there is a possibility that the Central Govt may withdraw bank cheque book facility in the near future, with an intent to encourage digital transactions.This has been denied by the Govt & reaffirmed that there's no such proposal
— Ministry of Finance (@FinMinIndia) November 23, 2017
மற்றொரு டுவீட்டில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தையை ஊக்குவிக்கும் வகையில் காசோலைகளுக்கு மூடுவிழா காணப்பட உள்ளதாக சில ஊடகங்கள்செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் உண்மையில்லை மத்திய அரசு இதுபோன்றதொரு எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்வதாகக் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications