குஜராத்தில் மோடி நிகழ்ச்சிக்கு டிமிக்கி கொடுத்த 5 பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட்
அகமதாபாத்: குஜராத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்காத 5 மாணவர்கள் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி நடைபெற்றது. அவர் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நவ்ரச்னா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த மாணவர்களின் பெற்றோரோ தங்கள் பிள்ளைகள் வகுப்பிற்கு செல்லாததால் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்கின்றனர்.
பள்ளி மாணவர்களை அரசியல் கருவிகளாக பயன்படுத்தக் கூடாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் நரேந்திர ராவத் கூறுகையில்,
இப்படி தான் மோடியின் பேரணிகளுக்கும், கூட்டங்களுக்கும் பாஜக கூட்டத்தை கூட்டுகிறது. இதை எங்கள் கட்சி எதிர்க்கும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications