தீவிரவாதத்தின் தென்னிந்திய மையமாக விஸ்வரூபமெடுக்கும் "கடவுளின் தேசம் கேரளா"
திருவனந்தபுரம்: கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் இந்த ஆண்டில் இதுவரை 22 தீவிரவாத வழக்குகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் தீவிரவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அங்கு ஐஎஸ்ஐஎஸ்சில் சேருவது, தீவிரவாத பிரச்சாரத்தில் ஈடுபடுவது, தீவிரவாதத்திற்கு பணம் பறிமாறப்படுவது உள்ளிட்ட தேசத்திற்கு எதிரான பல நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்கள் தற்போது தென் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்றும், அவை அனைத்தும் கேரளாவில் காளான்கள் போல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாகவே இங்கு தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகக் கூறுகின்றனர் கேரள போலீசார்.
ஹவாலா பணம் புழங்கும் மாநிலங்களில் கேரளா முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதேபோன்று வளைகுடா நாடுகளில் இருந்து அதிக அளவில் இங்கு பணம் வருகிறது. இந்தப் பணம் தீவிரவாதத்திற்கு மடை மாற்றப்படுவதாகவும் உளவுத் துறையினர் கூறுகின்றனர்.
இதுவரை கேரளாவில் அமைதியாக செயல்பட்டுக் கொண்டிருந்த தீவிரவாத அமைப்புகள் தற்போது அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் ஆகிய சர்வ தேச தீவிரவாத அமைப்புகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் 20 பேர் கேரளாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதே இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
மேலும், காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவிற்காக சண்டை போட்டவர்களில் இரண்டு பேர் கேளரத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. லஷ்கர் இ தொய்பாவிற்காக காஷ்மீரை சேராத கேரளத்தைச் சேர்ந்தவர்கள் சண்டையிட்டது இதுதான் முதல்முறை. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது கேரளா தீவிரவாதத்தின் தென்னிந்திய மையமாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications