இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும்தான் இந்தி கட்டாயம், மற்றவர்களுக்கு இல்லை- மத்திய அரசு
டெல்லி: சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமேதானே தவிர எந்த ஒரு இந்தி பேசாத மாநிலங்களின் மீதும் இந்தியைத் திணிப்பதற்கானது அல்ல என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்தியில் மோடி அரசு பதவியேற்ற உடனேயே உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழி பிரிவானது, சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது. இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்து எதிர்ப்புக் குரல் கொடுத்தன. ஜம்மு காஷ்மீர முதல்வர் ஒமர் அப்துல்லா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி கூட எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
இந்த நிலையில் இன்று பிரதமர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது:
இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாக எழுந்த கவலைகள் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழி துறையானது கடந்த 2014 மார்ச் 10-ந் தேதியன்று இந்தியை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே உள்ள நடைமுறையை உறுதி செய்து ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
அதில், ஏ பிரிவு மாநிலங்கள் அதாவது இந்தி பேசக் கூடிய மாநிலங்கள் சமூக வலைதளங்களில் இந்திக்கு சம முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், ப்ளாக்குகள் ஆகியவற்றில் இந்தியும் ஆங்கிலமும் கண்டிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் 10-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே உரியது. இந்தி பேசாத மாநிலங்களுக்கு பொருந்தாது. மேலும் இந்தி பேசுகிற மாநிலங்களுடனான இணைப்பு மொழியாக இந்தி இருக்கும் என்ற நடைமுறையை இந்த சுற்றறிக்கையும் உறுதி செய்கிறது.
இதையேதான் மே 27-ந் தேதியன்று உள்துறை அமைச்சகமும் உறுதி செய்து சுற்றறிக்கை அனுப்பியது. இதனால் இந்தி பேசுகிற மாநிலங்களில் சமூக வலைதளங்களில் இந்திக்கு கட்டாயம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது ஒரு புதிய கொள்கையும் அல்ல.. இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியும் அல்ல..
இவ்வாறு பிரதமர் அலுவலக அறிக்கையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications