ஜம்மு காஷ்மீரில் மொழி சிறுபான்மை பஹாரிகளுக்கு விரைவில் எஸ்.டி. இடஒதுக்கீடு: அமித்ஷா அதிரடி அறிவிப்பு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொழி சிறுபான்மை பஹாரிகளுக்கு விரைவில் பழங்குடி பட்டியலின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்தியாவில் மொழிசிறுபான்மையினருக்கு பழங்குடி பட்டியலின் கீழ் இடஒதுக்கீடு முதல் முறையாக வழங்குகிறது மத்திய அரசு.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் இன்று மோடி மோடி என முழங்குகின்றனர் பொதுமக்கள். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டால் அங்கு ரத்த ஆறு ஓடும்; ஜம்மு காஷ்மீர் பற்றி எரியும் என அச்சுறுத்தியவர்களுக்கு தக்க பதிலடிதான் இந்த மோடி- மோடி முழக்கம் என்பது.

370-வது பிரிவு நீக்கத்தால் நன்மை
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்படாமல் இருந்தால் இடஒதுக்கீடு சாத்தியமாகிவிடுமா? இப்போது 370-வது பிரிவை நீக்கிவிட்டோம். இதனால் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள், பஹாரிகள் என அனைத்து தரப்பினரும் தங்களது உரிமைகளைப் பெறக் கூடியதாக இருக்கிறது.

இடஒதுக்கீடு
370-வது பிரிவு நீக்கப்பட்டால் இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமாகி இருக்கிறது. குஜ்ஜார், பகர்வால், பஹாரி சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிபதி ஷர்மா ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. பஹாரி உள்ளிட்ட சமூகங்கள் விரைவில் எஸ்டி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெறப் போகின்றனர். இந்த விவகாரத்தில் குளிர்காயவும் சில சக்திகள் முயற்சி செய்தன. ஆனால் மக்கள் இதனை நிராகரித்துவிட்டனர்.

மோடிக்கு நன்றி சொல்லுங்க
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களாகிய நீங்கள் 3 குடும்பங்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். பஞ்சாயத்துகள், மாவட்ட கவுன்சில்களுக்கு 30,000 பேர் சுதந்திரமான தேர்தல் மூலம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் மத்திய அரசு இந்த மாநிலத்துக்கு வழங்கிய நிதியை சிலர் மட்டுமே அபகரித்து வந்தனர். இப்போது மக்கள் நலத் திட்டங்களுக்காக மட்டுமே ஒட்டுமொத்த நிதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

அடுத்த ஆண்டு தேர்தல்
ஜம்மு காஷ்மீர் மாநிலமான 2019-ல் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதன் பின்னர் இம்மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகள் முடங்கின. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications