மருத்துவ அதிசயம்.. போலி ரெம்டெசிவிர் மருந்து.. எடுத்துக்கொண்ட 90 சதவீதம் பேர் குணமானது எப்படி?
போபால்: போலி ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட கொரோனா நோயாளிகள் 90 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் பலர் வெறும் குளுக்கோஸ் கலந்து உப்பு நீரைத்தான் ரெம்டெசிவிர் மருந்து என நினைத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் குணமாகி இருப்பது மருத்துவ அதிசயமாக பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு இந்தியா முழுவதுமே கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ரெம்டெசிவிர் மருந்தை நேயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
இதனிடையே ரெம்டெசிவிர் மருந்து தான் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவை என நாடு முழுவதும் மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் அதை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் தவமாய் காத்துக் கிடக்கின்றனர்.

பலருக்கும் செலுத்தப்பட்டது
இந்த நிலையில், ரெம்டெசிவிர் தட்டுப்பாடை பயன்படுத்தி மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு கும்பல், போலி ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்திருக்கிறது. இது தெரியாமல் வாங்கி நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இந்த போலி ரெம்டெசிவிர் செலுத்தப்பட்டிருக்கிறது.

குளுக்கோஸ் உப்பு நீர்
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு போலி ரெம்டெசிவிர் மருந்தை சப்ளை செய்த கும்பலை போலீசார் கைது செய்தார்கள் அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் 1,200 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது, காலி பாட்டில்களில் குளுக்கோஸ் உப்பு கலந்த நீர் நிரப்பப்பட்டு ரெம்டெசிவிர் என விற்பனை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.

குணம் அதிகம்
இந்தூரில் இந்த போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்ட 10 நோயாளிகள் உயிரிழந்தனர். ஆனால் 90 சதவீத நோயாளிகள் உயிர் தப்பியதுடன் குணமடைந்துள்ளனர். இதில் அதிர்ச்சியான இன்னொரு விஷயமும் அங்கு தெரியவந்துள்ளது. உண்மையான ரெம்டெசிவிர் ஊசி போட்டு தப்பித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டபோது, போலி ரெம்டெசிவிர் போட்டு தப்பித்தவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நம்பிக்கை காரணம்
இதை கேட்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும் போலி ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விநியோகித்த கும்பலை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். உண்மையில் போலி ரெம்டெசிவிர் மருந்து அவர்களை காப்பாற்றியதா என்றால் நிச்சயம் வாய்ப்பு இல்லை. ரெம்டெசிவிர் மருந்து போட்டுவிட்டோம் என்ற நம்பிக்கையே அவர்களை காப்பாற்றியதா சொல்லப்படுகிறது. நம்பிக்கை தான் எல்லாரையும் காப்பாற்றி வருகிறது. உண்மையில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்து அல்ல. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நாளை குறைக்கும். அவ்வளவு தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications