அது ஏன் ஆகஸ்ட் 15ல் நமக்கு சுதந்திரம் தந்தார் மெளண்ட் பேட்டன்?
டெல்லி: இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேயர்கள் ஆக்ஸ்ட் 15ம் தேதியைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற காரணம் உங்களுக்குத் தெரியுமார்? இதோ அது தொடர்பாக கவர்னர் மவுண்ட்பேட்டன் பிரபு நூல் ஒன்றில் கூறியுள்ள விளக்கம்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்து அதன் பொறுப்பை கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒப்படைத்தது. அவர் 1947-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி அதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

இந்திய எல்லைகள்...
அது தொடர்பான குறிப்புகளை ஜவஹர்லால் நேருவிடம் அளித்தார் மவுண்ட்பேட்டன் பிரபு. ஆனால், அந்த புதிய திட்டப்படி பஞ்சாப் மற்றும் வங்காளம் இன்றி இந்திய எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் வசம்...
இந்த பகுதிகளுடன் பாகிஸ்தானைப் பெற்றுக் கொண்டார் முகமது அலி ஜின்னா. குர்தாஸ்பூரும் பாகிஸ்தான் வசம் இருந்தது.

நேரு அதிர்ச்சி...
இந்தக் குறிப்புகளைக் கண்டு நேரு அதிர்ச்சி அடைந்தார். இதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்தார். மேலும், காஷ்மீரையும், பெரோஸ்பூரையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பஞ்சாப்...
அதனைத் தொடர்ந்து மக்கள் தொகை அடிப்படையில் பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் குர்தாஸ்பூர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 15...
ஜூன் 3-ந் தேதி சுதந்திரம் வழங்குவதற்கான இறுதி திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பத்திரிகையாளர் கூட்டத்தில் சுமார் 300 செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு செய்தியாளர், இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் தேதி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மவுண்ட்பேட்டன் பிரபு, ஆகஸ்ட் 15ம் தேதி என பதிலளித்தார்.

நள்ளிரவில் சுதந்திரம்...
இது குறித்து, லார்ரி கோலின்ஸ் மற்றும் டொமினிக் லபிரே ஆகியோர் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்' (பீரிடம் அட் மிட் நைட்) என்ற புத்தகத்தில் மவுண்ட் பேட்டன் கூறுகையில், ‘இந்தியாவுக்கு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் சுதந்திரம் வழங்க நினைத்தேன். அதையடுத்து ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் வழங்க முடிவு செய்தேன்.

மக்கள் விரும்பவில்லை...
ஏனென்றால் அன்றுதான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரண் அடைந்த 2-ம் ஆண்டு நினைவு நாளாகும். ஆனால், குண்டு வீச்சு தொடர்பான நாளன்று சுதந்திரம் வழங்குவதை கோடிக்கணக்கான இந்துக்கள் விரும்பவில்லை.

அபசகுணம்...
ஆகஸ்டு 15-ந் தேதி அன்று சுதந்திரம் வழங்குவதாக அறிவித்ததற்கு ஆச்சரியமும், கடும் பீதியும் அடைந்தனர். ஏனெனில் ஆகஸ்டு 15-ந் தேதியை அபசகுண நாளாகவும், ஏளனம் செய்வதாகவும் கருதினர்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்து பஞ்சாங்கப்படி...
மேற்கத்திய முறைப்படி ஆகஸ்டு 15-ந் தேதி நள்ளிரவு பிறக்கிறது. எனவே இரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்து பஞ்சாங்கப்படி அன்று மங்கலகரமான நாளாகவும் அமைத்தது.

நேரு கண்ட வழி...
ஆனால், நேருவும், படேலும் இந்தப் பிரச்சினைக்கு சாஸ்திர ரீதியாக ஒரு வழி கண்டனர். அதாவது ஆகஸ்டு 14-ந் தேதி மதியம் நாடாளுமன்றத்தைக் கூட்டிய நேரு, கூட்டத்தொடரை நள்ளிரவு வரை தொடர்ந்து நடத்தினார். இதன் மூலம் ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திர பெற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications