நாகமணிதான் பால் கொடுத்தது.. குடிச்சுட்டுதான் மயங்கி விழுந்தேன்.. கணவர் கொடுத்த திகில் வாக்குமூலம்
காதலிக்காக.. மனைவி மீது கொலை பழி சுமத்தி உள்ளார் கணவன்
Recommended Video
கர்னூர்: "என் பொண்டாட்டி நாகமணி எனக்கு பால் கொடுத்தா.. அதை குடிச்சிட்டுதான் நான் மயங்கி விழுந்துட்டேன்.. அவதான் என்னை கொல்ல பார்த்தாள்" என்று சொன்ன கணவன், போலீசாரின் தீவிர விசாரணை வளையத்துக்குள் சிக்கி உள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் லிங்கமையா. இவருக்கு மதனந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த நாகமணி என்ற பெண்ணுடன் 9 நாளைக்கு முன்புதான் கல்யாணம் ஆனது.
9-வது நாளில் நாகமணியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து செல்ல, லிங்கமையா மதனந்தபுரம் வந்தார். கணவன் வீட்டுக்கு வரவும், நாகமணி பால் கொண்டு வந்து குடிக்க சொன்னார்.

விசாரணை
புது பொண்டாட்டி ஆசையாக தரவும், அதை வாங்கி குடித்தார் லிங்கமையா.. ஆனால் அடுத்த சில நிமிஷத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினரின் மாப்பிள்ளையை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினர். அங்கு இப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கல்யாணம்
இதை பற்றி லிங்கமையா குடும்பத்தினரிடமும் விசாரித்தனர். "நாகமணிக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை போல தெரிகிறது.. ஒருவேளை அவங்க வீட்டில் கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிருப்பாங்களோ என்று சந்தேகமாக இருக்கு" என்று தெரிவித்தனர்.

விசாரணை
பாலில் விஷம் கலந்ததா, நாகமணிதான் பாலில் விஷம் கலந்திருப்பாரா, அல்லது அவருக்கே தெரியாமல் இது நடந்ததா என்று தெரியவில்லை.. எதுவானாலும் முழு விசாரணைக்கு பிறகுதான் உண்மைத்தன்மை வெளியே வரும் என்றார்கள்.

லிங்கையா
இந்த நிலையில் தனது உறவினர்களிடம் தன்னை தன்னை கொலை செய்வதற்காக பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் என்று லிங்கையா சொல்லவும், இது பெரிய பிரச்சனையாக வெடித்தது. "நாங்க மாப்பிள்ளைக்கு பால் மட்டும்தான் தந்தோம்.. விஷம் தரவே இல்லை.. 8 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம் செய்து, எங்க பொண்ணை நாங்க இப்படி செய்வோமோ" என்று நாகமணியின் பெற்றோர்கள் கதறினர்.

கொலை பழி
இதையடுத்துதான், லிங்கையாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போதுதான் எல்லா விஷயமும் வெளியானது. லிங்கையா அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தாராம்.. ஆனால் வீட்டில் நாகமணியை கட்டி வைத்து விட்டார்களாம்.. இந்த கல்யாணம் பிடிக்காமல், பிரிந்து செல்லதான், நாகமணி மீது கொலை பழியை சுமத்த லிங்கையா பிளான் பண்ணினாராம். அதற்காக, நாகமணி தந்த பால் தந்தபோது, அதை வாங்கி குடிக்காமல், ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த பூச்சி மருந்தை யாருக்கும் தெரியாமல் குடித்துவிட்டார்.

காதலி
பிறகு, மயங்கியும் விழுந்துவிட்டார்.. நாகமணி மீது கொலை பழியை சுமத்திவிட்டால், காதலியை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பதுதான் லிங்கையாவின் திட்டமாம். இப்போது, அந்த காதலி, லிங்கையாவிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் ஒன்றுமே அறியாத அப்பாவி நாகமணியின் பெயரை கெடுத்து, வாழ்க்கையையும் சீரழித்ததைதான் குடும்பத்தினரால் ஜீரணிக்க முடியவில்லை.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications