எனது பாரதரத்னா விருதை இளைஞர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்...: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்
பெங்களூர்: தான் பெற்றுள்ள நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதை இளைஞர்களுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்.
நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த விழாவில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார்.
விருதைப் பெற்றுக் கொண்ட சச்சின், தனது விருதை தனது தாய் மற்றும் அனைத்து இந்தியத் தாய்மார்களுக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தனது பாரத ரத்னா விருதை இளைஞர்களுக்குச் சமர்ப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்.
இது குறித்து நேற்று அவர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிசம் கூறியதாவது :-

நல்ல முன்னேற்றம்...
பல ஆண்டுகளுக்கு பிறகு விஞ்ஞான துறையில் ஒருவரை மத்திய அரசு தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து இருப்பது போற்றுதலுக்கு உரியது. மேலும் தற்போது மற்ற துறைகளை காட்டிலும் விஞ்ஞான துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருவது நல்ல முன்னேற்றம் ஆகும்.

3வது இடத்தில் நான்....
இதுவரை விஞ்ஞான துறையில் சர்.சி.வி.ராமன், அப்துல்கலாம் ஆகியோருக்கு தான் பாரத ரத்னா விருது கிடைத்து இருந்தது. இப்போது 3-வதாக எனக்கும் அந்த விருது கிடைத்து இருப்பது இன்னும் அதிக சந்தோஷம் அளிக்கிறது.

இளைஞர்களுக்கு....
இந்த விருதை நான் இளைஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தற்போது இளைஞர்கள் டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான படிப்புக்கு பதிலாக, விஞ்ஞான துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அந்த துறையின் வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகள் மற்றும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள்.....
விஞ்ஞான துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதை அறிந்து முன்னேறி சென்றால் சாதனை சிகரத்தை தொடுவதில் சந்தேகம் எதுவும் இல்லை. நான் பெற்றுள்ள இந்த விருது இளைய சமுதாயத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.

சரியல்ல...
விஞ்ஞான துறையை அரசு புறக்கணிக்கிறது என்று கூறுவது சரியல்ல. மற்ற துறைகளை போலவே விஞ்ஞான துறையின் வளர்ச்சிக்கும் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது வரவேற்கத்தக்கது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications