எனது பாரதரத்னா விருதை இளைஞர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்...: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்
பெங்களூர்: தான் பெற்றுள்ள நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதை இளைஞர்களுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்.
நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த விழாவில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார்.
விருதைப் பெற்றுக் கொண்ட சச்சின், தனது விருதை தனது தாய் மற்றும் அனைத்து இந்தியத் தாய்மார்களுக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தனது பாரத ரத்னா விருதை இளைஞர்களுக்குச் சமர்ப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்.
இது குறித்து நேற்று அவர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிசம் கூறியதாவது :-

நல்ல முன்னேற்றம்...
பல ஆண்டுகளுக்கு பிறகு விஞ்ஞான துறையில் ஒருவரை மத்திய அரசு தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து இருப்பது போற்றுதலுக்கு உரியது. மேலும் தற்போது மற்ற துறைகளை காட்டிலும் விஞ்ஞான துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருவது நல்ல முன்னேற்றம் ஆகும்.

3வது இடத்தில் நான்....
இதுவரை விஞ்ஞான துறையில் சர்.சி.வி.ராமன், அப்துல்கலாம் ஆகியோருக்கு தான் பாரத ரத்னா விருது கிடைத்து இருந்தது. இப்போது 3-வதாக எனக்கும் அந்த விருது கிடைத்து இருப்பது இன்னும் அதிக சந்தோஷம் அளிக்கிறது.

இளைஞர்களுக்கு....
இந்த விருதை நான் இளைஞர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தற்போது இளைஞர்கள் டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான படிப்புக்கு பதிலாக, விஞ்ஞான துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அந்த துறையின் வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகள் மற்றும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள்.....
விஞ்ஞான துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதை அறிந்து முன்னேறி சென்றால் சாதனை சிகரத்தை தொடுவதில் சந்தேகம் எதுவும் இல்லை. நான் பெற்றுள்ள இந்த விருது இளைய சமுதாயத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.

சரியல்ல...
விஞ்ஞான துறையை அரசு புறக்கணிக்கிறது என்று கூறுவது சரியல்ல. மற்ற துறைகளை போலவே விஞ்ஞான துறையின் வளர்ச்சிக்கும் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது வரவேற்கத்தக்கது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications