உணவு கேட்டு வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை அசிங்கப்படுத்திய அதிகாரிகள்.. இந்த கேள்விக்கு பதில் எங்கே?
டெல்லி: ராணுவ வீரர்களுக்கு சரியான சாப்பாடு கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி தேஜ் யாதவ் என்ற எல்லை பாதுகாப்பு வீரர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றும் பாதுகாப்பு வீரராகும். அவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்கள் வழியாக பிற ஊடகங்களையும் சென்று சேர்ந்தன.
எனவே, எல்லை பாதுகாப்பு படை இதுகுறித்த விசாரணையை தொடங்கியது. ஆனால் விசாரணை தொடங்கிய நேற்றே எல்லை பாதுகாப்பு படை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தேஜ் பகதூர் ஒரு குடிகாரர் எனவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்பட்டிருந்தது.

தண்டனை பெற்றவர்
2010ம் ஆண்டு தேஜ்பகதூர் தனது மேல் அதிகாரி தலையில் துப்பாக்கியை வைத்ததாகவும், இதற்காக அவர் 2 மாதங்கள் கடுங்காவல் தண்டனை அனுபவித்ததாகவும் பாதுகாப்பு படை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மனநலம் பாதிப்பு
தேஜ் பகதூருக்கு ரெகுலராக மனநல கவுன்சலிங் கொடுப்பது கட்டாயம் என்றும், வேறு பல நடவடிக்கைகளும் அவரது ஆரோக்கியத்திற்காக எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், அவரது வீடியோ உரையில் கூட அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பது உறுதியாகிறது என்றும் பாதுகாப்பு பபடை வெளியிட்ட அறிக்கை சுட்டிக் காட்டியது.

காரணம் என்ன?
இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒன்றுதான். ஒருவேளை எல்லை பாதுகாப்பு படை கூறியதை போல குடிபோதைக்கு அடிமையானவர், மனநலன் சீர் கெட்டவர் என்றே வைத்துக்கொண்டாலும், அப்படிப்பட்டவரை ஏன் எல்லையில் பாதுகாப்பு பணிக்கு நியமித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதிலும் பாகிஸ்தான் எல்லை என்பது மிகுந்த சென்சிட்டிவான ஏரியா. அங்கு தேஜ்பகதூரை காவலுக்கு நியமித்த காரணம் என்ன?

வீண் பழி
நிஜமான பிரச்சினைகளை தீர்த்து பிற ராணுவ வீரர்களுக்கும் நல்லது செய்ய வேண்டிய இடத்தில் உள்ள பாதுகாப்பு படை அதிகாரிகள் செய்த தப்பை மறைக்க வீணாக பழிபோடுகிறார்களோ என்ற சந்தேகத்தை அந்த அறிக்கை ஏற்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications