For Daily Alerts
Just In
புதிய ரூபாய் நோட்டில் சாயம் போனால்தான் ஒரிஜனல்... சக்திகாந்த தாஸ் நூதன விளக்கம்!
சாயம் போனால்தான் புதிய ரூபாய் நோட்டுகள் நல்ல நோட்டுகள் என்கிறது மத்திய அரசு.
டெல்லி: புதிய ரூபாய் நோட்டில் சாயம் போனால்தான் நல்ல நோட்டு; இல்லையெனில் அது கள்ள நோட்டு என மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்த புதிய ரூபாய் நோட்டுகள் பற்றி பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக புதிய ரூ2,000 ரூபாய் நோட்டு சாயம் போவதாக அந்த வீடியோக்களில் காட்டப்படுகின்றன.
இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதிலளித்த அவர்,
புதிய நோட்டுகளில் சாயம் போவதற்குக் காரணம் அச்சிட பயன்படுத்தப்படுகிற மைதான். ஈரமாக்கப்பட்ட பஞ்சை வைத்து தேய்த்தால் லேசாக சாயம் ஒட்டும். அப்படி சாயம் ஒட்டினால்தான் அது நல்ல நோட்டு.
புதிய ரூபாய் நோட்டுகளில் சாயம் போகாவிட்டால் அது கள்ள நோட்டு என்றார்.
Comments
English summary
Economic affairs secretary Shaktikanta Das had cleared the confusion surrounding the colour leak from the new currency notes and said that's the nature of the paper the notes are made from.