யாஸ் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கம்.. வானிலை மையம் எச்சரிக்கை
புவனேஸ்வரம்: யாஸ் புயல் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் யாஸ் புயல் நேற்று முன் தினம் உருவானது. இந்த ஆண்டின் 2ஆவது புயல், வங்கக் கடலில் உருவான முதல் புயல் என்பதால் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் இன்று மதியம் தம்ரா துறைமுகத்திற்கும் பாலசோருக்கும் இடையே கரையை கடக்கிறது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறியதால் மேற்கு வங்கம், ஒடிஸாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

எதிர்கொள்ள
இந்த புயலை எதிர்கொள்ள இரு மாநில அரசுகளும் தயார் நிலையில் உள்ளன. கிழக்கு கடலோர பகுதிகளை கடுமையாக இந்த புயல் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அது போல் காற்றின் வேகமும் மணிக்கு 185 கி.மீ. இருக்கும். இந்த புயல் மேற்கு வங்கத்தை கடக்கிறது.

மேற்கு வங்கம்
இதுகுறித்து இந்திய வானிலை மையம் இயக்குநர் சஞ்சீவ் பானர்ஜி கூறுகையில் மேற்கு வங்கம், ஒடிஸாவில் மரங்கள் வேரோடு சாயும். மின் கம்பங்களும் முறிந்து விழும். காற்றின் வேகத்தில் எதிரே இருப்பது தெரியாத அளவுக்கு இருக்கும். கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும்.

மீனவர்கள்
கடலோரம் வசிக்கும் மீனவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். சந்த்பாலி மாவட்டம் இந்த புயலால் கடுமையாக பாதிக்கக் கூடும் என தெரிகிறது என்றார். ஆம்பன் புயலை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடும் சேதம்
மேற்கு வங்கத்தில் 20 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்படும். ஹவுரா, ஹூக்லி, பங்குரா, பிர்பும், நடியா, பச்சிம், முர்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்கள் புயலால் பாதிப்படையும். இதுவரை 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு தாழ்வான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications