காப்பாத்துங்க! 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்! சுரங்கம் தோண்டி பத்திரமாக மீட்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் 40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சுரங்கம் தோண்டி பத்திரமாக மீட்கப்பட்டான்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம் நாராயண்புரா பதர்பூர் அருகே உள்ள நாராயணபுரா கிராமத்தை சேர்ந்தவன் திபேந்திரயாதவ் (வயது 5).
இவன் தனது குடும்பத்தினருடன் அந்தபகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். குடும்பத்தினர் வயலில் வேலை செய்தபோது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்
அப்போது அங்கு திறந்து கிடந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான். சிறுவனை காணவில்லை என குடும்பத்தினர் தேடினர். அப்போது ஆழ்துளை கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. அப்போதுதான் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது தெரிந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

காப்பாற்றும்படி அழுத சிறுவன்
இதையடுத்து அவர்கள் சிறுவனிடம் பேசினர். அவனும் காப்பாற்றும்படி அழுதான். இதை கேட்ட அவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு வந்தனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆக்சிஜன் வழங்கல்
முதற்கட்டமாக சிலிண்டர் மூலம் சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி வாகனம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டது. மேலும் சிறுவனின் செயல்பாட்டை மீட்பு குழுவினர் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். 25 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கி உயிருக்கு போராடுவது தெரியவந்தது.

சுரங்கம் தோண்டி மீட்பு
இதையடுத்து 25 அடி ஆழத்துக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டி அதில் இருந்து ஆழ்துளை கிணற்றுக்கு சுரங்கம் தோண்டி சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவனை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை
மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் பயன்படாமல் உள்ள ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும் என்ற பிரசாரம் துவங்கி உள்ளது. இதற்கிடையே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வீடியோ கால் மூலம் சிறுவனுடன் உரையாடி ஊக்கப்படுத்தினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications