இந்திய ராணுவத்தில் கடும் ஆயுத பற்றாக்குறை- 20 நாட்கள் கூட போரிட முடியாது: திடுக் தகவல்
டெல்லி: தற்போதைய சூழலில் ஒரு யுத்தம் ஏற்பட்டால் 20 நாட்கள் கூட ராணுவத்தால் போரிட முடியாத அளவுக்கு கடும் ஆயுத பற்றாக்குறை இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் 2வது பெரிய ராணுவமாக திகழ்கிறது இந்திய ராணுவம். ஆனால் இந்திய ராணுவத்தில் வீரர்கள் பற்றாக்குறையுடன் அதிநவீன பீரங்கிகள், ஆயுதங்களுக்கும் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது தற்போது நாட்டின் ராணுவத்தின் வசம் உள்ள ஆயுதங்க்ளை வைத்து ஒரு யுத்தத்தை 20 நாட்கள் கூட சமாளிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் அதிநாவீன போர் கருவிகளை வாங்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. ராணுவத்திடம் குறைந்தது 50% போர் தளவாடங்கள் சேமிப்பில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 20% தளவாடங்கள் கூட இந்திய ராணுவத்தின் சேமிப்பில் இல்லை.
2019-ஆம் ஆண்டிற்குள் இந்திய ராணுவத்தை 100% பலப்படுத்த வேண்டுடிய நெருக்கடி உள்ளது. இதற்காக ஆண்டுக்கு 19ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அதிநாவீன கருவிகளை வாங்க வேண்டும் என்றார்.