முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு தாராளமாக செல்லலாம்... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்ஸாம் கவர்னர்
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஆச்சார்யா, "இந்தியா இந்துகளுக்கானது" என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா " இந்தியா இந்துகளுக்கானது" மற்ற நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடிவரும் இந்துக்களை ஏற்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை என பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய தனது கருத்துக்கு விளக்கமளித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது "இந்துகள் மட்டும் அல்ல பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற மற்ற நாடுகளில் உள்ள அனைத்து மதத்தினரும் இந்தியாவிற்கு வரலாம்.
இந்தியா பரந்த மனப்பான்மை கொண்ட நாடு. டாடா, கோத்ரேஜ், வாடியா போன்றவர்கள், தற்போது ஈரான் என்று அழைக்கப்படும் பெர்சியா நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. உலகிலேயே மிகவும் சகிப்புத் தன்மை கொண்ட நாடு இந்தியா தான்.
இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதையும் மீறி இங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதும் முஸ்லிம்கள் தங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர். அதுபோல பாகிஸ்தானுக்கு அல்லது வங்கதேசத்துக்கு செல்ல விரும்புகிறவர்கள் தாராளமாக செல்லலாம்" என்றார். அங்கு துன்பத்திற்கு ஆளானால் திரும்பவும் இந்தியாவிற்கு வரலாம். நாங்கள் அவர்களை அனுமதிப்போம்" என தெரிவித்துள்ளார்.
ஒரு சர்ச்சைக்குரிய கருத்திற்கு விளக்கம் அளிப்பதாக கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் அசாம் மாநில ஆளுநர் பி.பி.ஆச்சார்யா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications