ஆர்.சி.பி. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் மல்லையா... ஆனால் "மென்டார்" அவர்தான்!
டெல்லி: ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினாலும் கூட அணியின் தலைமை ஆலோசகராக மல்லையா தொடர்வார் என்று பெங்களூர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் அணியை நிர்வாகித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் விளையாட்டு பிரைவைட் லிமிட்டெட் நிறுவனத்தில் இயக்குநராக இருந்து வந்தார் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.

இமெயில் மூலம்
ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்கு மார்ச் 7ம் தேதி இ மெயில் மூலம் இந்தத் தகவலை பெங்களர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அணி நிர்வாகி ருஸ்ஸல் ஆடம்ஸ் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

நாட்டை விட்டு ஓடிய பிறகு
மல்லையா நாட்டை விட்டு ஓடிய ஐந்து நாட்கள் கழித்து இந்த இமெயில் தகவல் கிரிக்கெட் வாரியத்திற்குப் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2ம் தேதி மல்லையா இந்தியாவை விட்டுக் கிளம்பிச் சென்றார்.

ருஸ்ஸல் ஆடம்ஸ் வசம்
தற்போது அணி நிர்வாகத்தை ருஸ்ஸல் ஆடம்ஸ் நிர்வகிக்கவுள்ளாராம். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் கூட்டங்களில் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா கலந்து கொள்வாராம்.

ஓனர் அவர்தான்
மல்லைய இயக்குநர் பதவியிலி்ருந்து விலகினாலும் கூட நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்பான விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதை பிசிசிஐயும் உறுதி செய்துள்ளது.

டியாஜியோதான் ஒரிஜினல் பாஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை நிர்வகித்து வருவது யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனமாகும். இதை ஏற்கனவே இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்திடம் மல்லையா விற்று விட்டார் என்பது நினைவிருக்கலாம். எனவே டியாஜியோவின் கட்டுப்பாட்டில் இந்த ஐபிஎல் அணி வந்துள்ளது.

2008ம் ஆண்டு முதல்
2008ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மல்லையா விலைக்கு வாங்கினார். முதல் தொடர் முதல் அந்த அணியை அவர் நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications