அரபி மொழி தெரியாத இந்தியர்களை சுட்டுக் கொல்கின்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்?
டெல்லி: ஈராக்கில் அரபி மொழி தெரியாத இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சுட்டுக் கொல்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கின் பல முக்கிய நகரங்களை சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர்.

அரபி மொழியில்..
இப்படி சிக்கியிருக்கும் இந்தியர்களிடம் தீவிரவாதிகள் அரபி மொழி குறித்து கேள்வி எழுப்புகின்றனர். அரபி மொழியை புரிந்து கொள்ள முடியாத, அவர்கள் சொல்லும் அரபி வார்த்தைக்கு அர்த்தம் சொல்லத் தெரியாத இந்தியர்களை சுட்டுவிடுவதாக கூறப்படுகிறது.

உயிர் தப்பிய பஞ்சாப்வாசி
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள துஜைல் என்ற நகரில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தமது உறவினர்களிடம் இந்த தகவலை போன் மூலம் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?
தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய தாம் பேருந்து ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அப்போது தீவிரவாதிகள் தம்மிடம் சில அரபி வார்த்தைகளைக் கூறி அதற்கு அர்த்தம் கேட்டனர். தமக்கு அர்த்தம் கூற தெரியாததால் ஓடும் பேருந்தில் சுடப்பட்ட நிலையில் கீழே தள்ளிவிடப்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தப்பி சிகிச்சை
பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தாம் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அத்துடன் தீவிரவாதிகளின் துணிகளை துவைப்பது, காலணிகளை துடைப்பது போன்ற வேலைகளிலும் இந்தியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

பதற்றம்
இத்தகைய தகவல்களால் ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருக்கும் இந்தியர்களின் உறவினர்கள் மேலும் பதற்றம் அடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications