அரபி மொழி தெரியாத இந்தியர்களை சுட்டுக் கொல்கின்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்?
டெல்லி: ஈராக்கில் அரபி மொழி தெரியாத இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சுட்டுக் கொல்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கின் பல முக்கிய நகரங்களை சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர்.

அரபி மொழியில்..
இப்படி சிக்கியிருக்கும் இந்தியர்களிடம் தீவிரவாதிகள் அரபி மொழி குறித்து கேள்வி எழுப்புகின்றனர். அரபி மொழியை புரிந்து கொள்ள முடியாத, அவர்கள் சொல்லும் அரபி வார்த்தைக்கு அர்த்தம் சொல்லத் தெரியாத இந்தியர்களை சுட்டுவிடுவதாக கூறப்படுகிறது.

உயிர் தப்பிய பஞ்சாப்வாசி
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள துஜைல் என்ற நகரில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தமது உறவினர்களிடம் இந்த தகவலை போன் மூலம் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?
தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய தாம் பேருந்து ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அப்போது தீவிரவாதிகள் தம்மிடம் சில அரபி வார்த்தைகளைக் கூறி அதற்கு அர்த்தம் கேட்டனர். தமக்கு அர்த்தம் கூற தெரியாததால் ஓடும் பேருந்தில் சுடப்பட்ட நிலையில் கீழே தள்ளிவிடப்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தப்பி சிகிச்சை
பின்னர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தாம் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அத்துடன் தீவிரவாதிகளின் துணிகளை துவைப்பது, காலணிகளை துடைப்பது போன்ற வேலைகளிலும் இந்தியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

பதற்றம்
இத்தகைய தகவல்களால் ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருக்கும் இந்தியர்களின் உறவினர்கள் மேலும் பதற்றம் அடைந்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications